கிரில்லவெல பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் பிரபல
இசையமைப்பாளர் ஜனந்த் வரகாகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு - கண்டி பிரதான வீதியில் கிரில்லவெல பிரதேசத்தில் மஞ்சள் கடவையால் பாதையை கடக்க முற்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
இதனையடுத்து நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட அவர் எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். கடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
மஞ்சள் கடவையில் விபத்து.. பெண் உயிரிழப்பு. பிரபல இசையமைப்பாளர் கைது.
Reviewed by Madawala News
on
March 12, 2019
Rating: