-பாறுக் ஷிஹான் -
யாழ்ப்பாணம் மாநகர முதல்வருக்கு அரசியல்வாதி ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு கடிதம்
மூலமாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாநகல சபை முதல்வர் இ.ஆனொல்ட்டின் பெயரில் கடந்த 15 ஆம் திகதி கடிதம் மூலம் ஒரு கொலை அச்சுறுத்தல் கடிதம் மூலமாக விடப்பட்டதோடு அக்காலத்தில் நடைபெற்று முடிந்த கம்பன கழக இறுதி நிகழ்விற்குச் செல்லும் சமயம் கொல்லப்படுவாய் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளதோடு ஓர் அரசியல்வாதியின் பெயரைக் குறிப்பிட்டு அந்த அசியல் வாதி மிகவும் பொல்லாதவர் அவரை அறியாது மோத வேண்டாம் எனவும் எழுதப்பட்டுள்ளது.
இவ் அச்சுறுத்தல் தொடர்பில் மாநகர முதல்வர் யாழ்ப்பாணம் பிரதம பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டு சென்றதோடு முறைப்பாட்டினையும் பதிவு செய்துள்ளார். அத்துடன் குறித்த அச்சுறுத்தல் தொடர்பாக பொலிசாரிடம் முறையிடப்பட்டதனைத் தொடர்ந்தும் அச்சுறுத்தல் தொடர்வதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இவ்வாறு தொடரும் அச்சுறுத்தலின் தொடர்ச்சியாக முதல்வர் ஆனொல்ட்டின் துணைவியாரான அரச ஊழியரின் தொலைபேசியில் உள்ள வைபர் இலக்கத்திற்கு ஓர் புதைகுழியின் புகைப்படம் அனுப்பி வைக்கப்பட்டு இதற்கு தயார் செய்யவும் என எழுதப்பட்டுள்ளது.இவ்விடயம் தொடர்பிலும் குறித்த புகைப்படம் அனுப்பிவைக்கப்பட்ட இலக்கம் குறித்தும் பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளது
யாழ் முதல்வருக்கு, அரசியல்வாதி ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு கடிதம் மூலமாக கொலை அச்சுறுத்தல்.
Reviewed by Madawala News
on
March 21, 2019
Rating: