கொழும்பு - குருநாகல் பிரதான வீதியில்
பொல்கஹவல, மெத்தலந்த
பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற பாரிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கர வண்டி ஒன்றும் , கடற்படையினர் பயணித்த வேன் ரக வண்டியும் மோதிக் கொண்டதில் இவ்விபத்து நேர்ந்துள்ளது.
முச்சக்கர வண்டியில் சென்ற இரு பெண்களும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளன்ர்
விபத்தில் மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முச்சக்கர வண்டியில் சென்றவர்கள் அலவ்வ பிரதேச திருமணம் ஒன்றுக்கு சென்றவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
முச்சக்கரவண்டி கோர விபத்து... இரு பெண்கள் உட்பட மூவர் பலியான சோகம்.
Reviewed by Madawala News
on
March 15, 2019
Rating: