6 வயது குழந்தைக்கு பலாத்காரமாக மது அருந்த செய்த நபர். #இலங்கை


தனது 6 வயது ஆண் குழந்தைக்கு அயல்வீட்டில் இடம்பெற்ற திருமண வைபவமொன்றில் பலாத்காரமான
முறையில் மது அருந்தச் செய்யப்பட்டுள்ளதாக அம்பலாந்தோட்டை - மொதரவள்ளிய பிரதேசத்தை சேர்ந்த தாயொருவர்  காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த வீட்டிற்கு விளையாட சென்ற குழந்தை மீண்டும் வீடு திரும்பிய போது அவரின் வாயில் இருந்து மது நாற்றம் வீசிய நிலையில் , அது தொடர்பில் குழந்தையிடம் தாய் வினவியுள்ளார்..

இதன்போது , திருமண வைபவம் இடம்பெற்ற வீட்டில் இருந்த நபரொருவர் தனக்கு ஒருவித பானத்தை அருந்தச் செய்ததாக குழந்தை தெரிவித்துள்ளது.

இந்நிலையில்   "குழந்தையை அம்பலாந்தோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி மருத்துவ அறிக்கையொன்றை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அம்பலாந்தோட்டை காவற்துறையின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
6 வயது குழந்தைக்கு பலாத்காரமாக மது அருந்த செய்த நபர். #இலங்கை 6 வயது குழந்தைக்கு பலாத்காரமாக மது அருந்த செய்த நபர். #இலங்கை Reviewed by Madawala News on March 12, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.