வெலிகமயில் அமைந்துள்ள அனைத்து சமூக சேவை சங்கங்களும் ஒன்றிணைந்து
"போதைப் பொருள் அற்ற வெலிகம நோக்கி" எனும் தொனிப் பொருளில் ஆரம்பித்துள்ள பாரிய திட்டத்தின் முதற்கட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடைபவனி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
எதிர்வரும் பெப்ரவாரி 24ம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 07:00 மணிக்கு தெனிபிடிய அஸ்ஸபா மகாவித்தியாலயத்தில் இருந்து வெலிகம அறபா தேசிய பாடசாலைக்கு வந்தடைய ஏற்பாடாகியுள்ளது.
இந் நிகழ்வில் ஊர் மக்கள், பாடசாலை மாணவர்கள், உலமாக்கள், பொலிஸ் மற்றும் இன்னும் பல விஷேட அதிதிகளும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
"போதைப் பொருள் அற்ற வெலிகம நோக்கி" மாபெரும் நடைபவனி ஏற்பாடு.
Reviewed by Madawala News
on
February 21, 2019
Rating: