–பாறுக் ஷிஹான்–
யாழில் முதலாவது அரபுகல்லூரியான சலாமிய்யா அரபுக்கல்லூரி திறப்பு விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் இன்று(15) வெள்ளிக்கிழமை 4 மணியளவில் சமூக சேவகர் எம்.எம்.எம். நிபாஹீர் தலைமையில் வரவேற்புரையுடன் ஆரமபமான இந்நிகழ்வில் புத்தளம் காஸிமிய்யா மத்ரஸாவின் உஸ்த்தும் அ . நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் ஜம்இய்யத் சவ்துலு தலைவருமான அஷ்ஷெய்ஹ் ஜூனைத் மஹ்மூத் ( காஸிமி மதனி) சிறப்பு விருந்தினராகவும் விஷேட அதிதியாக கலந்து கொண்டார்.
மேலும் இம்மத்ரஸா தலைவரும் யாழ் கிளிநொச்சி தலைவரும் அ . இ . ஜ . உ நிறைவேற்றுக்குழு உறுப்பினருமான மெளலவி சுப்யான் யாகூதி மற்றும் மத்ரஸாவின் அதிபர் ஹுஸைன் காஸிமி யாழ் ஓஸ்மானியா கல்லூரியின் அதிபர் சேஹூ ராஜீது உலமாக்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
யாழில் முதலாவது அரபுகல்லூரியாக, சலாமிய்யா அரபுக்கல்லூரி திறப்பு.
Reviewed by Madawala News
on
February 15, 2019
Rating: