புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் தில்லையடி பகுதியில், நேற்று (08) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில்,
இளைஞர் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம் -தில்லையடி, அரபா நகரைச் சேர்ந்த பாரூக் முஹம்மது நஸ்கிம் (வயது 20) எனும் இளைஞரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
புத்தளம் நகரை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று, எதிர் திசையில் இருந்து பயணித்த கெப் வாகனம் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதன்போது, முச்சக்கரவண்டியில் பயணித்த குறித்த மூவரும் படுகாயமடைந்த நிலையில், புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதன்போதே, குறித்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த மேலும் இருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்துடன் தொடர்புடைய கெப் வண்டி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
-ரஸீன் ரஸ்மின் TM -
முச்சக்கரவண்டி - கெப் விபத்து.. 2 இளைஞர்கள் காயம். முஹம்மது நஸ்கிம் உயிரிழந்த சோகம்.
Reviewed by Madawala News
on
February 09, 2019
Rating: