பால்மாவில் கலப்பட விவகாரம்... நான் பொய் சொல்லவில்லை. அதி­கா­ரிகள் சுகா­தார அமைச்­சரை ஏமாற்­றியுள்­ளனர்.

(எம்.ஆர்.எம்.வஸீம்)
இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்மா தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில் தெரி­விக்­கப்­பட்ட விட­யங்­க­ளுக்கு நான் பொறுப்­பேற்க தயா­ராக இருக்­கின் றேன். 

சுகா­தார அமைச்சு அதி­கா­ரிகள் சுகா­தார அமைச்­சரை ஏமாற்­றி யுள்­ளனர். அதனால் தெரி­வுக்­குழு அமைத்து உண்­மையை கண்­ட­றிய நட  வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என கைத்­  தொழில் வாணிபத் துறை பிரதி அமைச்சர் புத்­திக பத்­தி­ரன தெரி­வித்தார். 

பாரா­ளு­மன்றம் நேற்று வெள்­ளிக்­கி­ழமை சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தலை­மையில் கூடி­யது. பிர­தான நட­வ­டிக்கைகள் நிறை­வ­டைந்த பின்னர் இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்மா தொடர்பில் விசேட கூற்­றொன்றை முன்­வைத்து உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். 

அவர் அங்கு தொடர்ந்து   உரை­யாற்­று­கையில்  இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்­மாவில் கலந்­தி­ருக்கும் விட­யங்கள் தொடர்பில் நான் பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்­தி­ருந்தேன். என்னால் தெரி­விக்­கப்­பட்ட விட­யங்கள் அனைத்­தையும் எனது பிரதி அமைச்­சுக்கும் நுகர்வோர் அதி­கா­ர­ச­பைக்கும் கிடைத்த முறைப்­பா­டு­க­ளுக்­க­மை­யவே தெரி­வித்­தி­ருந்தேன். அத்­துடன் இந்த விட­யங்­களை சபையில் முன்­வைப்­ப­தற்கு விட­யத்­துக்கு பொறுப்­பான அமைச்சர் அது­தொ­டர்பில் எனக்கு எழுத்து மூலம் அனு­மதி வழங்­கி­யி­ருந்தார். 

இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்மா தொடர்பில் பாரா­ளு­மன்­றத்­துக்கு என்னால் தெரி­விக்­கப்­பட்ட விட­யங்­களை நான் பொறுப்­பு­டனே தெரி­வித்தேன். மாறாக தன்­னிச்­சை­யாக எத­னையும் தெரி­விக்­க­வில்லை. அதே­போன்று என்­னு­டைய உரையில் நான் எந்த நிறு­வ­னத்தின் பெய­ரையும் தெரி­விக்­க­வில்லை. ஆனால் அன்­றைய தினம் இது தொடர்பில் உறுப்­பி­னர்கள் கருத்து தெரி­விக்­கும்­போது பெயர்­களை தெரி­வித்­தி­ருக்­கலாம்.

பால்மா இறக்­கு­மதி செய்யும் நிறு­வ­ன­மான பொன்­டேரா நிறு­வனம் முந்­திக்­கொண்டு இறக்­கு­மதி செய்யும் பால்­மாவில் எந்த கலப்­ப­டமும் இல்லை இன்று (நேற்று) ஊட­கங்­களில் அறி­வித்தல் போட்­டி­ருக்­கின்­றது. 

அதே­போன்று மது­வ­ரித்­தி­ணைக்­கள முன்னாள் அதி­காரி ஒருவர் பொன்­டேரா நிறு­வ­னத்தில் இருந்­து­கொண்டு பால்­மாவின் விலையை அதி­க­ரிக்­கு­மாறு நுகர்வோர் அதி­கார சபை அதி­கா­ரி­களை மிரட்டி வரு­கின்றார். விலை அதி­க­ரிக்­கா­விட்டால் சர்­வ­தேச ரீதியில் நட­வ­டிக்கை எடுப்­ப­தாக தெரி­வித்­துள்ளார்.

 பால்­மா­வினால் மனித உட­லுக்கு ஏற்­படும் பாதிப்­புக்கள் தொடர்பில் சுகா­தார அமைச்­சினால் பத்­தி­ரி­கை­களில் விளம்­பரம் பிர­சு­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால் பால்­மாவில் இந்த பிரச்­சி­னையும் இல்லை என சுகாதார அமைச்சர் நேற்று (நேற்று முன்­தினம்) பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்­துள்ளார்.

 சுகா­தார அமைச்சர் அவ­ருக்கு கிடைக்­கப்­பெற்ற அறிக்­கை­க­ளை­வைத்­துக்­கொண்­டுதான் இவ்­வாறு தெரி­வித்­தி­ருப்பார். ஆனால் நான் சபையில் பொய் சொல்லவில்லை. சுகாதார அதிகாரிகள் சுகாதார அமைச்சரை ஏமாற்றியுள்ளனர்.

எனவே இதுதொடர்பாக பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் கலப்படங்கள் மேற்கொள்ளப்படுகின்றதா என்பது தொடர்பில் உண்மையை வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் .
பால்மாவில் கலப்பட விவகாரம்... நான் பொய் சொல்லவில்லை. அதி­கா­ரிகள் சுகா­தார அமைச்­சரை ஏமாற்­றியுள்­ளனர். பால்மாவில் கலப்பட விவகாரம்... நான் பொய் சொல்லவில்லை. அதி­கா­ரிகள் சுகா­தார அமைச்­சரை ஏமாற்­றியுள்­ளனர். Reviewed by Madawala News on February 09, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.