கிராண்ட்பாஸ் - மல்வத்தை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில்
விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் மாகந்துரே மதுஷுடன் கைது செய்யப்பட்ட கஞ்சிப்பானை இம்ரானுடன் தொடர்புகளைப் பேணிய பெண்ணொருவரே காயமடைந்துள்ளார்.அவர் காலம் சென்ற பாதாள உலக தலைவன் பாஜியின் இரண்டாவது மனைவி என தெரிவிக்கப்படுகிறது.
”குடு சூட்டி” என்றழைக்கப்படுகின்ற ஆஷா ஃபாரி என்ற 39 வயதான பெண்ணே சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.
குறித்த பெண் ஹெரோயின் விற்பனையில் ஈடுபடுபவர் என்பதும் தெரியவந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.காயமடைந்த பெண் தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
‘குடு சூட்டி’ ஆஷா ஃபாரி மீது துப்பாக்கி சூடு நடத்தியது கஞ்சிபான இம்ரானின் அடியாள் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
‘குடு சூட்டி’ ஆஷா ஃபாரி மீது துப்பாக்கி சூடு நடத்தியது கஞ்சிபான இம்ரானின் அடியாள் ; பொலிஸ்
Reviewed by Madawala News
on
February 15, 2019
Rating: