வக்பு சட்டத்தில் புதிய திருத்தம். விரைவில் ஓய்வுபெற்ற நீதிபதியொருவரின் தலைமையில் குழு




அமைச்சரவை பத்திரமொன்றை தாக்கல் செய்யவும் அமைச்சர் ஹலீம் முஸ்தீபு..

36 வருட கால­மாக எவ்­வித மாற்­றங்­க­ளுக்கோ திருத்­தங்­க­ளுக்கோ உட்­ப­டுத்­தப்­ப­டாத வக்பு சட்­டத்தில் காலத்­துக்­கேற்ற நவீன சீர்­தி­ருத்­தங்கள் கொண்டு வரப்­ப­ட­வுள்­ளன. இதற்­கான அமைச்­ச­ர­வையின் அங்­கீ­கா­ரத்தைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் அடுத்­த­வாரம் அமைச்­ச­ரவைப் பத்­தி­ர­மொன்­றினை அமைச்­ச­ர­வைக்குச் சமர்ப்­பிக்­க­வுள்ளார்.

வக்பு சட்­டத்தில் தேவை­யான திருத்­தங்­களை வரைபு செய்­வ­தற்­காக ஓய்­வு­பெற்ற நீதி­ப­தி­யொ­ரு­வரின் தலை­மையில் 7 பேர் கொண்ட குழு­வொன்றும் நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளது.
வக்பு சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளுக்குப் பொறுப்­பாக இருக்கும் முன்னாள் நீர் வழங்கல் வடி­கா­ல­மைப்பு அமைச்சின் பிரதிச்  செய­லாளர் எம்.எச். மொய்­னுதீன் இது தொடர்பில் கருத்து தெரி­விக்­கையில்,

1956 ஆம் ஆண்டு அமு­லுக்கு வந்த வக்பு சட்டம் 1962 ஆம் ஆண்­டிலும் 1982 ஆம் ஆண்­டிலும் இரு தட­வைகள் திருத்­தங்­க­ளுக்கு உள்­ளா­கி­யது. அதன் பின்பு கடந்த 36 வரு­டங்­க­ளாக மாற்­றங்­க­ளுக்­குள்­ளா­க­வில்லை.

வக்பு சட்­டத்தில் காலத்­துக்­கேற்ற மாற்­றங்கள் தேவை.பள்­ளி­வாசல் நிர்­வா­கங்­களை ஒரு கட்­ட­மைப்­புக்குள் கொண்டு வரு­வ­தற்கும் வக்பு சொத்­து­களைப் பாது­காப்­ப­தற்கும் வக்பு சட்­டத்தில் திருத்­தங்கள் தேவைப்­ப­டு­கி­றது. தற்­போ­துள்ள வக்பு சட்டம் காலத்­துக்­கேற்­ற­தாக இல்லை.

ஓர் ஊரில் இன்று 10 , 15 பள்­ளி­வா­சல்கள் இயங்­கினால் பள்­ளி­வா­சல்கள் இணைந்து சம்­மே­ள­ன­மொன்­றினை அமைத்­துக்­கொண்டு செயற்­ப­டு­கி­றார்கள்.

இவ்­வாறு பள்­ளி­வா­சல்கள் ஒன்­றி­ணைந்து சம­மே­ளனம் உரு­வாக்­கிக்­கொள்­வது தொடர்­பாக தற்­போ­துள்ள சட்­டத்தில் எதுவும் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

சில இடங்­களில் வக்பு சொத்­துக்கள் அத்­து­மீறி கையேற்­கப்­பட்­டுள்­ளன. இவ்­வா­றான சந்­தர்ப்­பங்­களில் சட்­டத்தை அமுல்­ப­டுத்­து­வதில் சில பிரச்­சி­னைகள் இருக்­கின்­றன. சில கட்­டுப்­பா­டுகள் இருக்­கின்­றன.

வக்பு சட்­டத்தின் கீழ் வக்பு சபையும் வக்பு ட்ரிபி­யு­னலும் இயங்கி வரு­கின்­றன. வக்பு ட்ரிபி­யு­னலில் விசா­ர­ணை­களின் பின்பு வழங்­கப்­படும் தீர்ப்­பு­க­ளுக்கு எதி­ராக மேன்­மு­றை­யீடு செய்­ய­மு­டியும். பள்­ளி­வாசல் நிர்­வாக சபை தெரி­வு­க­ளுக்கு எதி­ராக மேன்­மு­றை­யீடு செய்யும் பழைய நிர்­வாகம் தொடர்ந்தும் பத­வியில் இருக்கும் நிலை இன்று நில­வு­கி­றது.

பழைய நிர்­வாகம் மேன்­மு­றை­யீடு செய்­வதால் அதைத் தடை செய்­வ­தற்கு வக்பு ட்ரிபி­யு­ன­லுக்கு அதி­கா­ர­மில்லை.

வக்பு சொத்துகளைப் பாதுகாப்பதற்கும் பள்ளிவாசல்களில் முறையான நிர்வாகக் கட்டமைப்பினை நிலை நிறுத்துவதற்கும் வக்பு சட்டத்தில் திருத்தங்கள் அவசியமாகும்.

இச் சட்டத்தில் திருத்தங்கள் இவ் வருடத்துக்குள் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக் கப்படுகின்றன என்றார்.
வக்பு சட்டத்தில் புதிய திருத்தம். விரைவில் ஓய்வுபெற்ற நீதிபதியொருவரின் தலைமையில் குழு வக்பு சட்டத்தில் புதிய திருத்தம். விரைவில் ஓய்வுபெற்ற நீதிபதியொருவரின் தலைமையில் குழு Reviewed by Madawala News on February 15, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.