(கரீம்.எ.மிஸ்காத்)
புத்தளம் இலங்கையின் குப்பைத்தளமாகும் திட்டத்தை எதிர்த்து பெப்ரவரி 13,14,15 ஆகிய
தினங்கள் கறுப்பு நாட்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் நேற்று (13/02/2019 ) புதன்கிழமை எதிர்ப்பு முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரச தனியார் அலுவலர்கள், மாணவர்கள்,
ஊழியர்கள் போன்றோர் தங்கள் வேலை நிலையங்களுக்கும், பாடசாலைகளுகக்கும் கறுப்பு பட்டிகளை அணிந்தவர்களாக சென்றமையை அவதானிக்க முடிந்தது.
மேலும் முன்பள்ளிகளில் பயிலும் மழலைச் சிறுவர் செல்வங்கள் கறுமை ஆடைகளுடனும் கறுப்பு தலைப்பட்டிகள், கைப்பட்டிகள் என்பவற்றுடனும்
வீதியில் போராடினர்.
இளைஞர்களினதும் மக்களினதும் கடின முயற்சியாலும்
சர்வமத ஒன்றிணைப்பாலும் கடந்த சில தினங்களாக இத்திட்டத்திற்கு எதிரான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக செய்யப்பட்டு வருகின்றன.
புத்தளத்தின் அனைத்து குடிமக்களும் ஒன்றிணைந்து
இரவிரவாக கறுப்பு கொடிகளை வீடுகளிலும் ஊர் பொது இடங்களிலும் ஏற்றியதோடு பெனர்கள், பதாதைகள் போன்றவற்றை
நகர் பூராகவும் கட்டியுள்ளதை காணலாம்.
மேலும் வாகனங்களும் கறுமைக் கொடிகளை ஏந்தியவைகளாகவே பயணித்தன.
கடந்த சில மாதங்களாக போராட்டங்களாலும்
மகஜர் கையளிப்புகளாலும் புகையிரத மரியல்களாலும் ஆர்ப்பாட்டங்களாலும் தங்கள் எதிர்ப்பையும் கவலையையும் காட்டிய இம் மக்கள் நிராகரிப்புகளில் இருந்து சளைக்காமல் மீண்டும் திரண்டு எழுந்தமையை அவதானிக்க முடிகின்றது.
புத்தளம் மண்ணில் கொழும்பிலிருந்து குப்பைகளை கொண்டு வந்து தட்டவுள்ள இத்திட்டத்தில் இம்மக்களின் அதிருப்தியை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது.
13/02 முதல் நாள் புதன் இந்நிழ்வுகள் நிறைவுற்றது.
வியாழன் (14/02) புத்தளத்து அனைத்து முஸ்லிம்களான ஆண்கள், பெண்கள் நோன்பு நோற்கவுள்ளதோடு
அன்றைய தினம் நோன்பு திறக்கும் நிகழ்வும் புத்தளம் கொழும்பு பேஸ் கடற்கரை திடலில் இடம்பெறவுள்ளது.
15/04 வெள்ளிக்கிழமை புத்தளம் பிரதேசத்தின் அனைத்து கடைகளும் மூடப்படுவதோடு பிற்பகல் 1:00மணிக்கு அனைத்து சமூக மக்களாலும்
பாரிய மக்கள் எழுச்சிப் பேரணியும் இடம்பெறவுள்ளன.
இதற்கான அழைப்பை சர்வமத ஒன்றியம் விடுத்துள்ளது. இவர்களோடு
க்ளீன் புத்தளம் அமைப்பினரும் இணைந்து செயல்படுகின்றனர்.
கறுப்பு தினங்களின் மூலம் இலக்கை நோக்கிய புத்தளம்... ஒரு பார்வை.
Reviewed by Madawala News
on
February 14, 2019
Rating: