கொட்டகலை - ஸ்டோனிகிளிப் தோட்டத்திலிருந்து சுமார் ஐந்து அடி நீளமான சிறுத்தையின் சடலமொன்று
மீட்கப்பட்டுள்ளதாக திம்புள்ள, பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொது மக்கள் வழங்கிய தகவலையடுத்து இறந்த நிலையில் சிறுத்தையின் சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.
மிக நீண்ட காலமாக ஸ்டோனிகிளிப் தோட்டத்தில் சிறுத்தைகளின் நடமாட்டம் காணப்பட்ட நிலையில் வீட்டு தோட்டத்தில் பன்றிக்கு போடப்பட்டிருந்த கம்பி வலையில் சிக்கி உயிரிழந்துள்ளது.
தற்போது வீடுகளுக்கு அருகில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்திருக்கின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த சிறுத்தையின் உடல் நல்லதண்ணி வனஜீவராசி தினைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக திம்புள்ள, பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தோட்டத்திலிருந்து சுமார் ஐந்து அடி நீளமான சிறுத்தையின் சடலம் மீட்பு.
Reviewed by Madawala News
on
February 16, 2019
Rating: