நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பருடன் மோதிய சொகுசு பஸ். ஒருவர் உயிரிழப்பு. மூவர் காயம்.
முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கங்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிகளுடன் பயணித்த சொகுசு பேருந்தே இவ்வாறு விபத்திற்குள்ளாகி உள்ள்தாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிறு காயங்களிற்குள்ளானவர்களிற்கு விபத்து இடம்பெற்ற பகுதியில் சிகிச்சைகள் இடம்பெற்றன.
குறித்த விபத்து முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவின் பனிங்கங்குளம் ஏ9 வீதியில் இன்று அதிகாலை 4.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தரித்து நின்ற கல் ஏற்றிய ரிப்பர் வாகனத்தில், அதி வேகமாக பயணித்த குறித்த பேருந்து மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் சாரதி உதவியாளர் என அறியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அதேவேளை விபத்தில் சிக்கியோரை மீட்கும் பணியிலும் மாங்குளம் பொலிஸார் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.
குறித்த பேருந்து வீதியில் தரித்து நின்ற ரிப்பர் வாகனத்துடன் மோதி வீதியின் மறு பக்கம் பயணித்து சிறு பற்றைக்குள் சென்றுள்ளது. சாரதியின் கவனயீனம் மற்றும் நித்திரை காரணமாகவே குறித்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றன.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பருடன் மோதிய சொகுசு பஸ். ஒருவர் உயிரிழப்பு. மூவர் காயம்.
Reviewed by Madawala News
on
February 26, 2019
Rating: