ஐக்கிய தேசியக் கட்சியின் மீது சேறு பூசுவதை நிறுத்துங்கள்.. விரைவில் அர்ஜுன மஹேந்திரனைக் கைது செய்வோம்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடையவர்களை, ஐக்கிய தேசியக் கட்சி பாதுகாப்பு
வழங்காதெனத் தெரிவித்துள்ள பிரதி அமைச்சர் நளீன் பண்டார, அர்ஜுன மஹேந்திரனைக் கைது செய்வதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
சர்வதேச பொருளாதார அலுவல்கள் அமைச்சில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர்,
மத்திய வங்கி பிணைமுறி விநியோகத்தில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் மீது தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனின் திருமண நிகழ்வில் அர்ஜுன் அலோசியஸ் கலந்துகொண்டிருந்ததை எவரும் கண்டுகொள்வதில்லை எனவும் தெரிவித்தார்.
பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் கீழேயே தண்டனை வழங்கப்பட்டதெனத் தெரிவித்த அவர், 11 மாதங்களாக குற்றவாளிகள் சிறையில் வைக்கப்பட்டிருந்தனர் என்றும் தெரிவித்தார்.
அதனால், ஐக்கிய தேசியக் கட்சியின் மீது சேறு பூசுவதை நிறுத்துவேண்டுமெனவும், அர்ஜுன் அலோசியஸ் போன்றே அர்ஜுன மஹேந்திரனை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், உதயங்க வீரதுங்க போன்றவர்களைக் கைது செய்வதற்கான நீண்ட நாள்கள் சென்றது போலவே வெளிநாட்டிலிருக்கும் அர்ஜுன மஹேந்திரனை சட்டரீதியாக கைது செய்யும் முயற்சிகளுக்கு கால அவகாசம் அவசியடுமெனவும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மீது சேறு பூசுவதை நிறுத்துங்கள்.. விரைவில் அர்ஜுன மஹேந்திரனைக் கைது செய்வோம்.
Reviewed by Madawala News
on
February 14, 2019
Rating: