பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் சேவைகளுக்கான வெற்றிட பிரச்சினைக்கு தீர்வு காண, ஓய்வு பெற்ற ஆசிரியர்களை சேவையில் இணைத்துக் கொள்ள முடிவு.


பின்தங்கிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் சேவைகளுக்கான வெற்றிடங்கள் குறித்த
பிரச்சினைக்கு தீர்வு காண, ஓய்வு பெற்ற ஆசிரியர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கான அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்யவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

மாத்தறை - நாவுல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை எடுத்துக் கொண்டால் அவற்றுள் பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளிலேயே ஆசிரியர் வெற்றிடங்கள் அதிகம் உள்ளன.

எனவே, குறிப்பிட்ட ஒரு வயதெல்லையை வரையறுத்து ஓய்வு பெற்ற ஆசிரியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் சேவைகளுக்கான வெற்றிட பிரச்சினைக்கு தீர்வு காண, ஓய்வு பெற்ற ஆசிரியர்களை சேவையில் இணைத்துக் கொள்ள முடிவு. பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் சேவைகளுக்கான வெற்றிட பிரச்சினைக்கு தீர்வு காண, ஓய்வு பெற்ற ஆசிரியர்களை சேவையில் இணைத்துக் கொள்ள முடிவு. Reviewed by Madawala News on February 10, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.