உறங்கிக் கொண்டிருந்த மனைவி மற்றும் மகள் மீது ஆசிட் வீசி தப்பிச்சென்ற நபர்.. மனைவி உயிரிழப்பு.


வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தாய் மற்றும் அவரது மகள் மீது, வீட்டுக்குள் நுழைந்துள்ள
இருவர், அசிட் வீசிவிட்டுத் தப்பிச்சென்ற சம்பவமொன்று, நேற்று (14) இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கம்புறுபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரத்கெக்குலாவ, போலகெவத்த, அமல்கா இல்லம் என்ற வீட்டிலிருந்தவர்கள் மீதே, இவ்வாறு அசிட் வீசப்பட்டுள்ளது.

சம்பவத்தில் எரிகாயங்களுக்கு இலக்கான அவ்விருவரும், ஆந்தபான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக, மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பின்னர், மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த பிரதாபசிங்க ஆரச்சியே விஜித்தா என்ற 39 வயதுத் தாய், உயிரி​ழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவரின் கணவர், கடந்த 5 மாதகாலமாக, மனைவி, மகளைப் பிரிந்திருந்த நிலையில், நேற்றிரவு, மற்றுமொரு நபருடன் வந்திருந்த அவர், தங்கள் மீது அசிட் வீசியதாக, குறித்த நபரின் மகள், பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
உறங்கிக் கொண்டிருந்த மனைவி மற்றும் மகள் மீது ஆசிட் வீசி தப்பிச்சென்ற நபர்.. மனைவி உயிரிழப்பு. உறங்கிக்  கொண்டிருந்த மனைவி மற்றும் மகள் மீது ஆசிட் வீசி தப்பிச்சென்ற நபர்.. மனைவி உயிரிழப்பு. Reviewed by Madawala News on February 15, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.