மாக்கந்துர மதுஷ்சை பிடித்ததைப் போல அர்ஜுன மகேந்திரனையும் பிடிப்போம்.


மாக்கந்துர மதுஷ் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் கும்பலை இலங்கையின் உளவுத் தகவல்
மூலமாக பிடித்ததைப் போலவே அர்ஜுன் மகேந்திரன், உதயங்க வீரதுங்க, சாலியவிக்கி ரமசூரியவையும் பிடிப்போம்.

எனினும் மாக்கந்துர மதுஷ் கைது செய்யப்பட்டாலும் கூட டுபாய் நீதிமன்றே தீர்மானம் எடுக்க  வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை பிரதம்ரிடத்திலான கேள்வி நேரத் தின் போது, ஜே.வி.பி.எம்.பி. நளிந்த ஜயதிஸ்ஸ எழுப்பிய, மாக்கந்துர மதுஷ் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் கும்பலை எமது நாட்டு உளவுத் தகவலுடன் டுபாய் பொலிஸ் கைதுசெய்துள்ளது.


அதேபோல் அர்ஜுன் மகேந்திரன், உதயங்க வீரதுங்க ஆகியோர் விடயத்தில் ஏன் கைதுசெய்ய முடியாதுள்ளது என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்த பிரதமர் மேலும் கூறுகையில்;


பாதாள உலகக் குழு மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் வெளிநாடுகளில் தலைம்றைவாக வாழ்கின்ற நிலையில், அவர்களை கைது செய்ய நாம் சர்வதேச பொலிஸ் மூலமாக சி வ ப் பு எ ச் ச ரி க் க க விடுத்து அவர் க ளின் உத வி க ளைப் பெற்று கைது செய்வோம்
இதுதான்  நடைமுறை.

சில நாடுகளுடன் இலங்கை செய்துள்ள இருநாட்டு ஒப்பந் தங்கள் இருப்பின் அதனை அடிப்படையாக வைத்து வெளி விவகார அமைச்சின் ஊடாக பேச்சுவார்த்தை நடத்தி இவ் வாறானவர்களை இலங்கைக்கு கொண்டுவருவோம் என்றார்.

மாக்கந்துர மதுஷ்சை பிடித்ததைப் போல அர்ஜுன மகேந்திரனையும் பிடிப்போம். மாக்கந்துர மதுஷ்சை பிடித்ததைப் போல அர்ஜுன மகேந்திரனையும் பிடிப்போம். Reviewed by Madawala News on February 07, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.