நாட்டில் பாரிய அளவில் போதைப்பொருள் மீட்கப்படும் நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கே செல்ல வேண்டும்.


நாட்டில் அண்மைக் காலமாக பாரியளவில் மீட்கப்படும் போதைப் பொருட்களுக்கு பிரதானமான
காரணம் விசேட அதிரடிப்படையினரின் துணிகர நடவடிக்கை எனவும், இதற்குரிய பாராட்டுக்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கே செல்ல வேண்டும் எனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.


இந்த நல்லாட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த ரஞ்ஜித் மத்தும பண்டாரவினாலேயே விசேட அதிரடிப்படை கட்டளைத் தளபதி எம்.ஆர். லத்தீப் நியமனம் செய்யப்பட்டார்.


முதுகெலும்புள்ள இந்த கட்டளை அதிகாரியினாலேயே இந்த வெற்றிகளை அடைய முடிந்துள்ளது.


கடந்த ஆட்சிக் காலத்திலும் போதைப் பொருட்கள் பிடிக்கப்பட்ட போதிலும் இதுபோன்று பாரியளவில் அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வில்லையெனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். D C
நாட்டில் பாரிய அளவில் போதைப்பொருள் மீட்கப்படும் நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கே செல்ல வேண்டும். நாட்டில் பாரிய அளவில் போதைப்பொருள் மீட்கப்படும் நடவடிக்கைக்கு பாராட்டுக்கள்  ஐக்கிய தேசியக் கட்சிக்கே செல்ல வேண்டும். Reviewed by Madawala News on February 09, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.