வத்தளை - ஹேகித்த பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிசூடு,
பும்மா எனப்படும் பாதாள
உலக குழுவினால் மேற்கொள்ளப்பட்டது என தெரிவயவந்துள்ளது.
குறித்த குழுவுக்கும் குடு செல்லி எனப்படும் பாதாள உலக குழுவுக்கும் இடையில் இடம்பெற்ற பெற்ற முரண்பாடே இந்த மோதலுக்கு காரணம் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் நேற்று மாலை, காரில் சென்றுக் கொண்டிருந்தவர்கள் மீது, பிரிதொரு காரில் சென்றவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் 31 மற்றும் 38 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தின் போது துப்பாக்கி சூடும் தாக்குதலுக்கு உட்பட்ட அதே காரில் இருந்த பெண்ணொருவருக்கு பாதிப்புகள் எவையும் ஏற்பட்டிருக்க வில்லை.
உயிரிழந்தவர்களில் 33 வயதுடைய நபர் ஸ்டீவன் ராஜேந்திரன் என அடையாளங் காணப்பட்டுள்ளார்.
மற்றைய நபர் மதி என்ற பெயரால் அழைப்படுபவர் என உயிரிழந்த மற்றைய இளைஞனின் உறவினர் பெண் வழங்கிய தகவல் மூலம் தெரியவந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் தொடர்ச்சியான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவரை பொலிஸார் கைசெய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் வெளியான வீடியோ:
https://youtu.be/oh9k22uULOs
(வீடியோ இணைப்பு) நேற்று இடம்பெற்ற கோர துப்பாக்கி சூடு சம்பவத்தின் அப்டேட்.
Reviewed by Madawala News
on
January 14, 2019
Rating: