சேனாவை உடனடியாக ஒழிக்கவும்.. இல்லாவிட்டால் நாட்டின் உணவு கலாசாரம் பாரிய பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும் .
“சேனா” புழுவை உடனடியாக ஒழிக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவை கூட்டத்தில் இன்று உத்தரவிட்டுள்ளார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
குறித்த சேனா புழுவை அழிக்காவிடின் நாட்டின் உணவு கலாசாரம் பாரிய பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நாட்டில் சிறந்த பெரும்போகம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சேனா புழுவின் தாக்கத்தால் விவசாயத்துறை பாரிய சவாலை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ள ஜனாதிபதி இதனை உடனடியாக கட்டுபடுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் தெரிவித்துள்ளார்.
சேனாவை உடனடியாக ஒழிக்கவும்.. இல்லாவிட்டால் நாட்டின் உணவு கலாசாரம் பாரிய பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும் .
Reviewed by Madawala News
on
January 14, 2019
Rating: