குருநாகல் – வெல்லவ ரயில் வழி பாதையில் கெப் ரக வாகனமொன்று ரயிலுடன் மோதுண்டதில் ஐவர்
படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (22) அதிகாலை, குருநாகல் நோக்கி பயணித்த கெப் ரக வாகனமொன்று, திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துகொண்டிருந்த ரயிலுடன் மோதுண்டதிலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த ஐவரும் படுகாயங்களுக்குள்ளான நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த ஐவரில், இராணுவ மேஜர் ஒருவரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ) இரயிலில் மோதுண்ட கெப் ரக வாகனம்... ஐந்து பேர் படுகாயம்.
Reviewed by Madawala News
on
January 22, 2019
Rating: