இலங்கைக்கு நிதி ஒத்துழைப்பு வழங்க நாம் தயார் .. பெப்ரவரியில் வருகிறோம்..



நிதியமைச்சர் மங்கள சமரவீர சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தலைவரான
கிறிஸ்டீன் ​லெகாட்டை இன்று (16) அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வைத்துச் சந்தித்துள்ளார்.

அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு மீண்டும் சர்வதேச நாணய நிதியத்தின் கடனை பெற்றுக்கொள்ளும் நோக்கில் வாஷிங்டன் நோக்கி பயணமாகியிருந்த நிலையிலேயே, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளரான கிறிஸ்டீன் லெகாட்டை சந்தித்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்காக நிதியமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட குழுவினர் கடந்த 11ஆம் திகதி அமெரிக்கா நோக்கி பயணமாகியிருந்தனர்.

​அத்துடன் சர்வதேச நாயண நிதியத்தால் வழங்கப்படும் 1.5 பில்லியன் ரூபாயான 6ஆவது த​வணைக் கடன் இதுவரை வழங்கப்படாமைக் குறித்தும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கை பிரதிநிதிகளுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சர்வதேச நாணய நிதியம், பெப்ரவரி மாதம் நடுப்பகுதியில் இலங்கைக்கு தமது குழுவினர் வருகைத்தரவுள்ளனரென அறிவித்துள்ளது.

இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க தாம் தயார் என, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டின் லெகார்ட் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு நிதி ஒத்துழைப்பு வழங்க நாம் தயார் .. பெப்ரவரியில் வருகிறோம்.. இலங்கைக்கு நிதி  ஒத்துழைப்பு வழங்க நாம் தயார் .. பெப்ரவரியில் வருகிறோம்.. Reviewed by Madawala News on January 16, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.