நானும் ஒரு முஸ்லிம் அபா­யாவை நான் ஏன் எதிர்க்க வேண்டும் ?



கிழக்கு மாகா­ணத்தின் கல்­வியை சீர்­கு­லைக்கும் நோக்­குடன் செயற்­ப­டு­கின்ற சில தீய சக்­தி­களே என் மீது அபாண்­டங்­களை சுமத்தி, என்னை மாகாணக் கல்விப் பணிப்­பாளர் பத­வியில் இருந்து துரத்த  எத்­த­னிக்­கின்­றன என்று கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்­பாளர் எம்.கே.எம்.மன்சூர் தெரி­வித்தார்.

சமூக வலைத்­த­ளங்­களில் தன் மீது பரப்­பப்­படும் குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரி­விக்­கையில், 

கிழக்கு மாகா­ணத்தின் கல்விப் பின்­ன­டை­வுக்கு அபா­யாவும் ஒரு காரணம் என்று நான் தெரி­வித்­த­தாக சிலர் பொய்­களைப் புனைந்து முக­நூல்­களில் பரப்பி வரு­கின்­றனர். எந்­த­வொரு இடத்­திலும் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் நான் அபாயா தொடர்பில் மாற்றுக் கருத்­துக்­களை தெரி­விக்­க­வில்லை. அது எனக்கு அவ­சி­யமும் இல்லை. எனது பிள்­ளை­களும் அபாயா அணி­கின்­றனர். அதனால் அவர்­க­ளது கல்வி பாதிக்­கப்­ப­ட­வில்லை.

நானும் ஒரு முஸ்லிம் என்ற ரீதியில் எமது இஸ்­லா­மிய மார்க்­கத்­திற்­குட்­பட்ட எமது பெண்­களின் கலா­சார ஆடை­யான அபா­யாவை நான் ஏன் எதிர்க்க வேண்டும். அதனால் எனக்கு என்ன இலாபம் கிடைத்து விடப்­போ­கி­றது. இதையும் மீறி அபா­யா­வுக்கு எதி­ராக கருத்துச் சொன்னால் அது எமது சமூ­கத்தில் எவ்­வா­றான அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்தும் என்­பது எனக்கு தெரி­யா­மலா உள்­ளது?

திரு­மலை ஷண்­முகா இந்துக் கல்­லூ­ரியில் கற்­பித்த முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்­கூ­டாது என்று அந்த பாட­சாலை சமூகம் மேற்­கொண்ட தீர்­மா­னத்­தினால் குறித்த ஆசி­ரி­யைகள் எதிர்­நோக்­கிய பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும் பொருட்டு சில முயற்­சிகள் எடுக்­கப்­பட்­டன. ஆனால் அது அந்த ஆசி­ரி­யை­க­ளுக்கு சாத­க­மாக அமைந்து விட­வில்லை என்­ப­தற்­காக சிலர் என் மீது பழி­போ­டு­கின்­றனர்.

இப்­பி­ரச்­சினை நான் மாகாணக் கல்விப் பணிப்­பா­ள­ராக பத­வி­யேற்­ப­தற்கு முன்பே இருந்து வந்­த­தாகும். இலங்கை மனித உரிமை ஆணைக்­குழு வரை பிரச்­சினை சென்­றது. நான் பத­வி­யேற்ற பின்­னரும் அந்தப் பிரச்­சினை இருந்­தது. எவ்­வா­றா­யினும் இப்­பி­ரச்­சி­னைக்கு சுமு­க­மான தீர்வு ஒன்றைக் காண்­ப­தற்கு நான் சம­ரச முயற்­சி­களில் ஈடு­பட்­டி­ருந்தேன். ஷண்­முகா பாட­சாலை சமூகம் அவர்­க­ளது தீர்­மா­னத்தில் இருந்து இறங்கி வரு­வ­தற்கு தயா­ரில்லை என்­பதை என்­னிடம் உறு­தி­யாக தெரி­வித்­தனர். ஷண்­முகா ஒரு தேசிய பாட­சாலை என்­ப­தனால் அதன் நிர்­வாக விட­யங்­களில் தலை­யீடு செய்­கின்ற அதி­காரம் மாகாணக் கல்வித் திணைக்­க­ளத்­திற்கு கிடை­யாது. மத்­திய கல்வி அமைச்­சினால் விடுக்­கப்­ப­டு­கின்ற பணிப்­பு­ரை­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது மாத்­தி­ரமே எமக்­குள்ள கட­மை­யாகும். அந்த அடிப்­ப­டை­யில்தான் ஷண்­முகா பாட­சா­லையின் முஸ்லிம் ஆசி­ரி­யை­களின் விடயம் கையா­ளப்­பட்­டது. கல்வி அமைச்சின் பரிந்­து­ரை­க­ளுக்கு மாற்­ற­மாக எந்­த­வொரு தீர்­மா­னத்­தையும் எம்மால் மேற்­கொள்ள முடி­யாது. ஷண்­முகா பாட­சாலை சமூ­கத்தின் நிலைப்­பாட்டை உள்­வாங்­கியே கல்வி அமைச்சு, மாகாணக் கல்வித் திணைக்­க­ளத்­திற்கு அறி­வு­றுத்­தல்­களை வழங்­கி­யி­ருந்­தது. அதனை எம்மால் மீற முடி­யா­தி­ருந்­தது.

இச் சூழ்­நி­லை­யில்தான் நான் ஒரு முஸ்­லி­மாக இருந்து கொண்டு முஸ்லிம் ஆசி­ரி­யை­க­ளுக்கு சார்­பாக நான் நடந்து கொள்­ள­வில்லை என்று என் மீது குற்­றஞ்­சாட்­டு­வது எந்த வகையில் நியா­ய­மா­னது என்று கேட்க விரும்­பு­கின்றேன்.நான் மாகாணக் கல்விப் பணிப்­பா­ள­ராக பத­வி­யேற்ற கையோடு இம்­மா­கா­ணத்தின் கல்வி முன்­னேற்­றத்­திற்­காக பல்­வேறு மூலோ­பாய திட்­டங்­களை வகுத்து, செயற்­ப­டுத்தி வரு­கின்றேன்.

கடந்த பல வரு­டங்­க­ளாக எமது கிழக்கு மாகா­ண­மா­னது கல்­வியில் இலங்­கை­யி­லுள்ள ஒன்­பது மாகா­ணங்­களுள் ஒன்­ப­தா­வது நிலை­யி­லேயே இருந்து வரு­கின்­றது. இந்த நிலையை மாற்­றி­ய­மைப்­ப­தற்கு நான் பாரிய முயற்­சி­களில் ஈடு­பட்­டுள்ளேன். இதற்­காக என்னை அர்ப்­ப­ணித்­துள்ளேன்.

எனது திட்டம் வெற்றி பெற்று கிழக்கு மாகாணம் கல்­வியில் முன்­னே­றினால் அது சில­ருக்கு பொறுக்க முடி­யாத தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும். அத்­த­கைய சிலரே என் மீது அபாண்­டங்­களை சுமத்தி, என்னை பத­வியில் இருந்து துரத்திவிட வேண்டும் என்று கங்­கணம் கட்­டிக்­கொண்டு, எனக்­கெ­தி­ரான சூழ்ச்­சி­களை நன்கு திட்­ட­மிட்டு வெற்­றி­க­ர­மாக அமுல்­ந­டத்தி வரு­கின்­றனர். அதில் ஓர் அங்­கமே ஷண்­முகா பாட­சா­லையை மையப்­ப­டுத்தி, நான் அபா­யா­வுக்கு எதி­ரா­னவன் என்று என்னை சித்­தி­ரிக்­கின்­றனர். இதன் மூலம் மாண­வர்கள், பெற்­றோர்கள், ஆசி­ரி­யர்கள் என்று அனை­வ­ரையும் எனக்­கெ­தி­ராக கிளர்ந்­தெழச் செய்­வதே அவர்­க­ளது திட்­ட­மாகும்.

நான் உண்­மைக்கும் நேர்­மைக்கும் தலைசாய்க்கின்ற ஒருவன் என்ற ரீதியில் நீதி, தர்மம், யதார்த்தம் என்பவற்றையெல்லாம் குழிதோண்டிப் புதைக்கின்ற இவர்களது பாமரத்தனமான செயற்பாடு கண்டு மனவேதனையடைகின்றேன்.

ஆகையினால் இதன் பின்னால் உள்ள சூட்சுமத்தை எல்லோரும் புரிந்து கொண்டு, எமது கிழக்கின் கல்வியை முன்னேற்றுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க முன்வர வேண்டும் என அன்பாகக் கேட்டுக்கொள்கின்றேன்” என்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் மன்சூர் மேலும் தெரிவித்தார்.
-Vidivelli

நானும் ஒரு முஸ்லிம் அபா­யாவை நான் ஏன் எதிர்க்க வேண்டும் ? நானும் ஒரு முஸ்லிம் அபா­யாவை நான் ஏன் எதிர்க்க வேண்டும் ? Reviewed by Madawala News on January 22, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.