-ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேசத்தில் உள்ள கடைகள் திறக்கப்பட்டு வழமை
போன்று காணப்படுகிறது.
அரச நிறுவனங்கள்,தனியார் வங்கிகள்,பொது நூலகங்கள் திறக்கப்பட்டு மக்களின் நடமாட்டம் காணப்படுகிறது ..
கிழக்கில் கடையடைப்பு பூரண கர்த்தால் இன்று வெள்ளிக் அனுஷ்டிப்பதாக துண்டுப் பிரசுரங்கள் வெளியாகின. கிழக்கு புதிய ஆளுனருக்கு எதிர்ப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .
ஆனால் கிண்ணியா பகுதியில் எவ்வித மாற்றங்களும் இடம் பெறவில்லை மக்களின் நடமாட்டமும் வியாபார நடவடிக்கைகளும் வழமை போன்றே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
--
Hasfar A Haleem BSW (Hons)
பிந்திய தகவல் : பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் துறைமுகங்கள் கப்பற்துறை பிரதியமைச்சராக இன்று நியமிக்கப்படுவதை அடுத்து ஆதரவாளர்கள் வெடி கொளுத்தி கொண்டாட்டம்.
கிழக்கில் கடைகள் திறக்கபட்டு வழமையான நிலை... #கிண்ணியா
Reviewed by Madawala News
on
January 11, 2019
Rating: