ஏ.எம்.பரக்கத்துள்ளா எழுதிய " ஏ . ஆர் . மன்சூர் - வாழ்வும் பணிகளும"நூல் வெளியிட்டு விழா




(எம்.என்.எம்.அப்ராஸ்)
ஏ . ஆர் . மன்சூர் பவுண்டேசன் ஏற்பாட்டில் முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர்
பற்றி கல்முனை  மாநகர சபை முன்னாள் உறுப்பினர்  ஏ.எம்.பரக்கத்துள்ளா எழுதிய  " ஏ . ஆர் . மன்சூர் - வாழ்வும் பணிகளும"நூல் வெளியிட்டு   விழா மர்ஹூம் ஏ.ஆர். மன்சூரின் பாரியார் ஹாஜியானி ஸொஹறா மன்சூர் முன்னிலையில் கல்முனை மாநகர சபை உறுப்பினரும்  முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரின் புதல்வர்  ரஹ்மத் மன்சூரின்  தலைமையில் எதிர்வரும் சனிக்கிழமை (12) 'பிற்பகல்  3 .30 மணிக்கு  கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் நல்லதம்பி கூட்ட மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.


இவ் நூல் வெளியிட்டு விழாவில்   பிரதம அதிதியாக   ஸ்ரீ லங்கா முஸ்லிம் கட்சியின் தேசிய தலைவரும் , நகர திட்டமிடல் , தேசிய நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் சட்ட முதுமானி ரஊப் ஹக்கீம்  அவர்கள் கலந்து  கொள்ளவுள்ளார்.


மேலும்  பேராதனைப் பல்கலைக் கழகத்தின் மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் எம் . ஏ . நுஃமான் அவர்கள் நூல் ஆய்வுரையை வழங்கவுள்ளார். அத்துடன்தென்கிழக்குப் பல்கலைக் கழகதின் தமிழ் மொழித்துறைத் தலைவர் , பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ்வினால் நூல் பற்றிய அறிமுகவுரையும் ,நூலாசிரியர்  ஏ . எம் . பறக்கத்துள்ளாஹ் அவர்களினால் ஏற்புரையையும்,நூல் வெளியிட்டின் நன்றியுரையை டாக்டர் எஸ் . நளீம்டின் அவர்களினால் நிகழ்த்தப்படவுள்ளது.
ஏ.எம்.பரக்கத்துள்ளா எழுதிய " ஏ . ஆர் . மன்சூர் - வாழ்வும் பணிகளும"நூல் வெளியிட்டு விழா ஏ.எம்.பரக்கத்துள்ளா எழுதிய  " ஏ . ஆர் . மன்சூர் - வாழ்வும் பணிகளும"நூல் வெளியிட்டு   விழா Reviewed by Madawala News on January 10, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.