பின்வரிசை உறுப்பினர்களின் போராட்டத்திற்கு ஸ்பீட் பிரேக்கர் வைத்த ரனில்..



கட்சி தலைமைத்து மறுசீரமைப்பு , சில அமைச்சர்களின் நடவடிக்கைகள் மற்றும் பின்வரிசை
உறுப்பினர்களுக்கு அமைச்சு பொறுப்பு வழங்கப்பட வேண்டி ஐக்கிய தேசிய கட்சி பின்வரிசை உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்க ஸ்பீட் பிரேக்கர் போட்டுள்ளார்.

நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் ஹேஷா விதானகே மற்றும் சமிந்த விஜேசிரி ஆகியோர் தேசிய பட்டியல் அமைச்சர் மலிக் சமரவிக்ரம உள்ளிட்ட சில அமைச்சர்களை இலக்கு வைத்து தங்கள் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

குறித்த விவாதம் இடம்பெற்ற போது அந்த இடத்தில் மலிக் சமரவிக்ரம இருக்கவில்லை. பிரதமரின் பணிப்புரையில் அவர் அங்கு அழைக்கப்பட்ட அதேவேளை விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள  சில அமைச்சர்களின் நடவடிக்கை ஆராய குழு ஒன்றை நியமிக்க தீர்மானித்துள்ளார்.

குறித்த குழுவிற்கு அமைச்சர் கபீர் தலைமை தாங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்சிக்குள் மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் களத்திற்கு வந்த பின்வரிசை உறுப்பினர்களின் போராட்டம் புஸ்வானமாகுமா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
பின்வரிசை உறுப்பினர்களின் போராட்டத்திற்கு ஸ்பீட் பிரேக்கர் வைத்த ரனில்.. பின்வரிசை உறுப்பினர்களின் போராட்டத்திற்கு ஸ்பீட் பிரேக்கர் வைத்த ரனில்.. Reviewed by Madawala News on January 09, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.