மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலிக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று மாகாண சபைக்கு
கொண்டுவரப்படவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் மேல் மாகாண சபை எதிர்கட்சி தலைவர் மஞ்சு ஶ்ரீ அரங்கல குறிப்பிட்டுள்ளார்.
நிதி குற்றச்சாட்டு உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுக்கள் அஸாத் சாலி மீது இருப்பதாக கூறியுள்ள அவர் அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் உள்ள ஒருவர் ஆளுநராக பதவி வகிப்பது மேல் மாகணத்திற்கு அகௌரவம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதராவாக ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்லாது சுதந்திர கட்சி , பொதுஜன பெரமுன உறுப்பினர்களும் ஆதவளிப்பதாகவும் , நம்பிக்கையில்லா பிரேரரணையை இன்றைய கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடிய பின்னர் சபைத் தலைவரிடம் ஒப்படைக்க உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் மேல் மாகாண சபை எதிர்கட்சி தலைவர் மஞ்சு ஶ்ரீ அரங்கல குறிப்பிட்டுள்ளார்.
.
ஆளுநர் சாலிக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா பிரேரணை வருகிறது..
Reviewed by Madawala News
on
January 22, 2019
Rating: