இன்று காலை 6 பேர் பலியான காரில் இருந்து துப்பாக்கியும் தோட்டாக்களும் கண்டுபிடிப்பு.


இன்று அதிகாலை வென்னப்புவ பிரதேசத்தில் விபத்துக்குள்ளான காரிலிருந்து 8 மி.மீற்றர் நீளமான துப்பாக்கியும் 8
ரவைகளும் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மீட்கப்பட்ட கைத்துப்பாக்கியும் ரவைகளும் இத்தாலியில் தயாரிக்கப்பட்டதென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு- சிலாபம் வீதியில் நைனமடம் பாலத்துக்கருகில் இன்று அதிகாலை இடம்​பெற்ற கார் விபத்தில் காரில் பயணித்த 9 ஆண்கள் படுகாயங்களுடன் நீர்கொழும்பு மற்றும் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

 குறித்த காரை பொலிஸார் பரிசோதித்தப் போதே இந்தத் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இன்று காலை 6 பேர் பலியான காரில் இருந்து துப்பாக்கியும் தோட்டாக்களும் கண்டுபிடிப்பு. இன்று காலை 6 பேர் பலியான காரில் இருந்து துப்பாக்கியும் தோட்டாக்களும் கண்டுபிடிப்பு. Reviewed by Madawala News on January 20, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.