இன்று அதிகாலை வென்னப்புவ பிரதேசத்தில் விபத்துக்குள்ளான காரிலிருந்து 8 மி.மீற்றர் நீளமான துப்பாக்கியும் 8
ரவைகளும் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்ட கைத்துப்பாக்கியும் ரவைகளும் இத்தாலியில் தயாரிக்கப்பட்டதென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு- சிலாபம் வீதியில் நைனமடம் பாலத்துக்கருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற கார் விபத்தில் காரில் பயணித்த 9 ஆண்கள் படுகாயங்களுடன் நீர்கொழும்பு மற்றும் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த காரை பொலிஸார் பரிசோதித்தப் போதே இந்தத் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இன்று காலை 6 பேர் பலியான காரில் இருந்து துப்பாக்கியும் தோட்டாக்களும் கண்டுபிடிப்பு.
Reviewed by Madawala News
on
January 20, 2019
Rating: