(வீடியோ) இன்று கொழும்பு மோதரையில் 6 பேர் மீது இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தின் மேலதிக விபரங்கள் வெளியாகியது.


கொழும்பு - முகத்துவாரம் - அளுத்மாவத்தை ரோயல் கார்டடின் வீட்டு வளாகத்துக்கு அருகில் இன்று
பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலானது, குடு ரொசான் என்ற பாதாள உலகக் குழுத் தலைவரான பிரசாத் ருவான் என்பவரால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று காவற்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

பச்சை நிற முச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தவர்கள் மீது, உந்துருளியில் பிரவேசித்த இரண்டு பேர் துப்பாக்கித் தாக்குதல் நடத்தி இருந்தனர்.

இதில் 58 வயதான ஒரு பெண் உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் ஒருவரின் உடல்நிலை பாரதூரமாக இருப்பதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டியில் பயணித்தவர்களுள் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் மட்டக்குளி - சமித்திபுர பகுதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான சூட்டி உக்குவா என்பவரின் மனைவியும், மைத்துனரும் இருந்துள்ளனர்.

கொழும்பு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற போதைப்பொருள் தொடர்பான வழக்கு விசாரணையின் பின்னர் வீடு திரும்பும் போதே அவர்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு ரீ56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும், 25 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

2016ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23ம் திகதி இரவு மட்டக்குளி - சமித்திபுர பகுதியில் குடு ரொசான் உள்ளிட்டவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் சூட்டி உக்குவா என்பவரும், அவரது நெருங்கிய நண்பர்கள் 4 பேரும் உயிரிழந்தனர்.

இதற்கு முன்னர் சூட்டி உக்குவா, குடு ரொசானின் தந்தையை கொலை செய்துள்ளதுடன், அதற்கு பழிவாங்கும் நோக்கில் குடு ரொசான், சூட்டி உக்குவாவின் தாயை கொலை செய்துள்ளார்.

அதன் பின்னரே குடு ரொசான் சூட்டி உக்குவாவை சுட்டுக் கொலை செய்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் தற்போது குடு ரொசான் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதலும் முன்னைய பகையை அடிப்படையாக வைத்து இடம்பெற்றிருக்கலாம் என்று காவற்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

தாக்குதலை நடத்தியவர்களை தேடும் நடவடிக்கையில் காவற்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பில் வெளியான வீடியோ :
(வீடியோ) இன்று கொழும்பு மோதரையில் 6 பேர் மீது இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தின் மேலதிக விபரங்கள் வெளியாகியது. (வீடியோ)  இன்று கொழும்பு மோதரையில் 6 பேர் மீது  இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தின் மேலதிக விபரங்கள் வெளியாகியது. Reviewed by Madawala News on December 10, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.