அனைவருக்கும் எனது நன்றிகள்... சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற இன பேதங்களை களைந்து நாட்டை முன்னேற்றுவோம்.


வடக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் புதிய அரசியலமைப்பின்
கீழ் பிரிக்கப்படாத ஒரு நாட்டில் ஒற்றையாட்சியின் கீழ் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வை நாங்கள் முன்வைப்போம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஜவினால் இன்று சபையில் முன்வைக்கப்பட்ட ரணில் மீதான நம்பிக்கை பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது.

குறித்த வாக்கெடுப்பில் 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 117 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்து நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றிபெற்றது.

இந்த வக்கெடுப்பில்மக்கள் விடுதலை முன்னணியினர் கலந்துகொள்ளவில்லை என்பதுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற அமர்வை புறக்கணித்திருந்தது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் தமிழர் முற்போக்குக் கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன ஆதரவு தெரிவித்திருந்தன.

இந்நிலையில் வாக்கெடுப்பில் வெற்றிபெற்றதையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் விசேட உரையொற்றை ஆற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

இந்த வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்த அனைவருக்கும் எனது நன்றிகள். மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி என்ற அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் கூற்றை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

அரசியலமைப்பின்படி நாம் அரசியல் பேதங்களுக்கு அப்பால் செயற்பட வேண்டும். 19 ஆவது திருத்தம் செய்து நாம் பல சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவினோம். அதனால் இன்று ஜனநாயகத்தை பாதுகாக்க மக்கள் முன்வரக்கூடிய நிலையயேற்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், என்ற இன பேதங்களை களைந்து நாமெல்லோரும் இலங்கையரகள் என்ற ரீதியில் நாட்டை முன்கொண்டுசெல்வோம்.

இதேவெளை, வடக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். புதிய அரசியலமைப்பினூடாக பிரிக்கப்படாத நாட்டில் ஒற்றையாட்சியின் கீழ் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வை நாங்கள் முன்வைப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
அனைவருக்கும் எனது நன்றிகள்... சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற இன பேதங்களை களைந்து நாட்டை முன்னேற்றுவோம். அனைவருக்கும் எனது நன்றிகள்...  சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற இன பேதங்களை களைந்து நாட்டை முன்னேற்றுவோம். Reviewed by Madawala News on December 12, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.