(வீடியோ இணைப்பு) மூதூர் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து அங்கு சிறு பதற்றநிலை!
மூதூர் பிரதான வீதியின் பெரிய பாலப் பகுதியில் இன்று (11.12.2018) இடம்பெற்ற
விபத்தில் மூதூரைச் சேர்ந்த 26 வயதுடைய நௌசீர் என்பவர் உயிரிழந்துள்ளார்
விபத்தில் மூதூரைச் சேர்ந்த 26 வயதுடைய நௌசீர் என்பவர் உயிரிழந்துள்ளார்
குறித்த விபத்தால் தற்போது அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
வாகன சாரதியை மூதூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்விபத்து தொடர்பாக மூதூர் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.
இதனிடையே பெருமளவான மக்கள் ஒன்றுதிரண்டு டயர்களை எரித்து எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் இதனால் சிறு பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-அல்மசூறா / மடவளை நியூஸ்
(வீடியோ இணைப்பு) மூதூர் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து அங்கு சிறு பதற்றநிலை!
Reviewed by Madawala News
on
December 11, 2018
Rating: