பொன்சேகா உள்ளிட்ட மேலும் சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவை கதவு மூடப்பட்டுள்ளதாக
கொழும்பு அரசியல் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சரத்பொன்சேக்காவுக்கு தான் அமைச்சு பதவி எதையும் வழங்கப போவதில்லையென இன்றிரவு நடந்த SLFP மத்திய குழு கூட்டத்தில் மைத்திரி தெரிவித்துள்ளார்.
மேலும் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இருந்து ஐக்கிய தேசிய கட்சிக்கு தாவும் உறுப்பினர்கள் எவருக்கும் அமைச்சு பதவி வழங்கப்படாது என்பதில் தான் மிக கடுமையாக இருப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
இன்று மூன்று உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துள்ள அதேவேளை நாளை மேலும் சிலர் இணைவார்கள் என தெரிவிக்கபட்ட போது ஜனாதிபதியின் நிலைப்பாடு காரணமாக சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சிலர் தங்கள் முடிவை மீள் பரிசீலனை செய்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பொன்சேகா உள்ளிட்ட சிலருக்கு அமைச்சரவை கதவு மூடப்பட்டது ..
Reviewed by Madawala News
on
December 18, 2018
Rating: