ஐக்கிய தேசிய கட்சி அமைக்கும் அரசாங்கத்தில் இணைய அனுமதி கோரிய துமிந்த அணி ..



ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து அரசாங்கம் ஒன்றை அமைத்து அதில் அமைச்சு பதவிகளை பெற
 ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி துமிந்த திஸாநாயக உள்ளிட்டவர்கள் ஜனாதிபதியிடம் நேற்று அனுமதி  கோரியுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று மாலை ஜனாதிபதியை சந்தித்த துமிந்த திஸாநாயக   லசந்த அலகியவன்ன விஜித் விஜேமுனி வீர குமார திஸாநாயக மஹிந்த சமரசிங்க பைஸர் முஸ்தபா மஸ்தான் அங்கஜன் உள்ளிட்டோர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு பதில் அளித்துள்ள ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்கவுடன் தனக்கு தனிப்பட்ட பிரச்சினை இல்லை எனவும் ஆனால் கொள்கை அளவில் அவருடன் இணைந்து பணியாற்ற முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் தனிப்பட்ட ரீதியில் தாங்கள் எடுக்கும் எந்த தீர்மானத்திற்கும் தான் தடை போடப்போவதில்லை என ஜனாதிபதி குறித்த உறுப்பினர்களிடம் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசிய கட்சி அமைக்கும் அரசாங்கத்தில் இணைய அனுமதி கோரிய துமிந்த அணி .. ஐக்கிய தேசிய கட்சி அமைக்கும் அரசாங்கத்தில் இணைய அனுமதி கோரிய துமிந்த அணி .. Reviewed by Madawala News on December 14, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.