கட்சிக்குள் தன்னை சிலர் தேவைக்காக மாத்திரம் பாவிப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின்
உப தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளாக தெரிவிக்கப்படுகிறது.
நெருக்கடி வரும் சந்தர்பங்களில் தன்னை பாவிப்பதாக குற்றம் சுமத்தியுள்ள அவர் ,
மத்திய வங்கி ஊழல் , பாடசாலை சீறுடைக்கு பதில் வவுச்சர், உரமாணியம் போன்ற விடங்கள் அரசாங்கத்தின் நற்பெயரை பெரிதும் பாதித்ததாக கூறியுள்ள அவர் கொழும்பு 3 இல் வசிப்பவர்களிக்கு நாட்டு மக்களின் கஷ்டம் புரியவில்லை என குற்றம் சுமத்தியுள்ளார்.
கட்சியில் அனைவரும் விருப்பம் அளித்தால் தான் பொறுப்புகளை ஏற்பதாக அவர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தர்ப்ப சூழ்நிலைக்காக என்னை பாவிக்கின்றார்கள்..
Reviewed by Madawala News
on
December 06, 2018
Rating: