ஐக்கிய தேசியக் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும் என எச்சரிக்கை கொழும்பு
மாநகர சபை உறுப்பினர் அஸாத் சாலி எச்சரித்துள்ளார்.
தற்போது ஐக்கிய தேசிய கட்சி புதிய ஒரு கூட்டணியை உருவாக்குவதாக ரனில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். அந்த கூட்டணி தலைமைத்துவ சபையின் வழிகாட்டலிலேயே இயங்கும்.கட்சி தலைவர்களே அந்த தலைமைத்துவ சபையில் இடம்பிடிப்பார்கள்.ஐக்கிய தேசிய கட்சி சார்பில் ரனில் விக்ரமசிங்வே அங்கு இருப்பார். சஜித்துக்கோ அல்லது ரவிக்கோ வாய்ப்பு வழங்கப்படாது.அதனால் ஐக்கிய தேசியக் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும் என சாலி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும்: அசாத் சாலி எச்சரிக்கை
Reviewed by Madawala News
on
December 19, 2018
Rating: