எதிரி ந‌ம‌க்கு அடித்தால் அதை ஓர‌ள‌வு தாங்க‌லாம்.  நாம் 98 வீத‌ம் ஆத‌ரித்த‌ ந‌ம் ந‌ண்ப‌ன் ந‌ம்மை அடித்தால் அவ‌ன் ஒரு துரோகி என்ப‌தைக்கூட‌ நாம் விள‌ங்காவிட்டால் ந‌ம்மை விட‌ முட்டாள் இருக்க‌ முடியாது.


வ‌ர‌லாற்றை பார்க்கும் போது ம‌ஹிந்த‌வுக்கு முஸ்லிம்க‌ள் 90 வீத‌ம் ஒரு

 தேர்த‌லிலும் வாக்க‌ளித்த‌தில்லை. அத‌னால் த‌ன‌க்கு வாக்க‌ளித்த‌ பெரும்பான்மையை திருப்திப்ப‌டுத்த‌ ம‌ஹிந்த‌ த‌ர‌ப்பு இன‌வாத‌த்தை ப‌ல‌வ‌ந்த‌மாக‌ அட‌க்க‌ முய‌ல‌வில்லை என்ப‌து உண்மையாகும். 


ஆனால் ர‌ணில் த‌லைமையிலான‌ ஆட்சிக்கு 98 வீத‌ம் முஸ்லிம்க‌ள் வாக்க‌ளித்தும் அவ‌ரும் சிங்க‌ள‌ பெரும்பான்மையை அணுச‌ரித்து இன‌வாத‌த்தை க‌ட்டுப்ப‌டுத்த‌வில்லை. 
இருவ‌ர் ஆட்சியிலும் முஸ்லிம் ச‌மூக‌ம் அடிவாங்கி குனூத் ஓதிய‌துதான் மிச்ச‌ம்.


எதிரி ந‌ம‌க்கு அடித்தால் அதை ஓர‌ள‌வு தாங்க‌லாம். நாம் 98வீத‌ம் ஆத‌ரித்த‌ ந‌ம் ந‌ண்ப‌ன் ந‌ம்மை அடித்தால் அவ‌ன் ஒரு துரோகி என்ப‌தைக்கூட‌ நாம் விள‌ங்காவிட்டால் ந‌ம்மை விட‌ முட்டாள் இருக்க‌ முடியாது.


நாம் ம‌ஹிந்த‌வுக்கு முட்டுக்கொடுப்ப‌தாக‌ சில‌ர் கூறுகின்ற‌ன‌ர். நாம்  முட்டுக்கொடுக்க‌ எம்மிட‌ம் ம‌க்க‌ள் அதிகார‌ம் என்ற‌ முட்டு உள்ள‌தா? அதிகார‌ ப‌ல‌ம் இல்லாத‌ நாம் யாருக்கும் முட்டுக்கொடுக்க‌ முடியாது என்ற‌ சாதார‌ண‌ அர‌சிய‌ல் கூட‌ ச‌மூக‌த்துக்கு தெரிய‌வில்லை.


யார் ந‌ல்ல‌து செய்தாலும் அத‌னை ஆத‌ரிப்ப‌து யார் கெடுதி செய்தாலும் அத‌னை எதிர்ப்ப‌து என்ற‌ கொள்கையில் உறுதி கொண்ட‌வ‌ர்க‌ள் நாம்.
 ம‌ஹிந்த‌ ஆட்சியின் போது முஸ்லிம் ச‌மூக‌ம் இன்ன‌ல்க‌ளுக்கு முக‌ம் கொடுத்த‌ போது நாம் ம‌ட்டுமே துணிந்து எதிர்த்தோம். முஸ்லிம் அமைச்ச‌ர்க‌ள் அமைச்ச‌ர்க‌ளாக‌ இருந்த‌ நிலையில் நாம் அர‌ச‌ ஆத‌ர‌வை வில‌க்கி த‌னித்து நின்று எதிர்த்தோம். 


ஒரு முஸ்லிம் எப்போதும் ந‌ல்ல‌தையும் கெட்ட‌தையும் ஆராய்ந்து பார்க்க‌ க‌ட‌மைப்ப‌ட்டுள்ளேன். க‌ண்ணை மூடிக்கொண்டு மார்க்க‌த்தை பின்ப‌ற்ற‌வும் அனும‌தியில்லாத‌ போது அர‌சிய‌லில் க‌ண்ணை மூடிக்கொண்டு எவ‌ரையும் ஆத‌ரிக்க‌வோ எதிர்க்க‌வோ முற்ப‌ட‌க்கூடாது. 


இந்த‌ நாட்டின் வ‌ர‌லாற்றில் அனைத்து பேரின‌ க‌ட்சிக‌ளும் இன‌வாத‌ சிந்த‌னை கொண்ட‌துதான். ஆனால் ம‌ஹிந்த‌வினால் முஸ்லிம் ச‌மூக‌ம் பெற்ற‌ அள‌வு ர‌ணிலால் பெற‌வில்லை என்கிறோம். குறிப்பாக‌ வ‌ட‌க்கு கிழ‌க்கு முஸ்லிம்க‌ள் ம‌ஹிந்த‌வுக்கு ந‌ன்றிக்க‌ட‌ன் ப‌ட்டுள்ளார்க‌ள் என்கிறோம். 


யுத்த‌ம் நிறைவு பெற்று சில‌மாத‌ங்க‌ளில் வ‌ந்த‌ ஜ‌னாதிப‌தி தேர்த‌லில் கிழ‌க்கில் உள்ள‌ முஸ்லிம் தொகுதிக‌ள் அனைத்திலும் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ தோற்க‌டிக்க‌ப்ப‌ட்ட‌ போதும் அவ‌ர் கிழ‌க்கு ம‌க்க‌ளை ப‌ழி வாங்க‌வில்லை.  நிறைய‌ அபிவிருத்திக‌ளை த‌ந்தார்.


ஆனால் ர‌ணில் த‌லைமையிலான‌ க‌ட்சிக்கு 98 வீத‌ம் முஸ்லிம்க‌ள் க‌ண்ணை  மூடிக்கொண்டு  வாக்க‌ளித்தும் அம்பாரை ப‌ள்ளி தாக்க‌ப்ப‌ட்ட‌ போது அம்பாரைக்கு வ‌ந்தும் சேத‌முற்ற‌ ப‌ள்ளியை கூட‌  பார்க்காத‌வ‌ர் என்ப‌தால்த்தான் நாம் குற்ற‌ம் சொல்கிறோம்.


 இவ்வாறெல்லாம் நாம் சொல்வ‌த‌ன் மூல‌ம் இன்னொரு வ‌ழியில் நாம் முஸ்லிம் ச‌மூக‌த்துக்கு மிக‌ப்பெரும் ந‌ன்மை செய்கிறோம்.


அதாவ‌து ர‌ணில் மூல‌ம் முஸ்லிம் ச‌மூக‌த்துக்கு எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌வில்லை என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் ப‌கிர‌ங்க‌ குற்ற‌ம் சொல்வ‌தால் இத‌னை நீங்க‌ள் மாற்றி உல‌மா க‌ட்சியும் புக‌ழும் அள‌வு முஸ்லிம் ச‌மூக‌த்துக்கு உத‌வ‌ வேண்டும் என‌ ர‌ணிலுக்கு முட்டுக்கொடுப்போர் அவ‌ரிட‌ம் சொல்வ‌த‌ற்கு நாம் வ‌ழி ச‌மைத்துள்ளோம். அவ்வாறு அவ‌ர்க‌ள் சொல்வ‌த‌ற்கு ஏன் ப‌ய‌ப்ப‌டுகிறார்க‌ள் என‌ தெரிய‌வில்லை. 


அர‌சிய‌ல் ரீதியில் த‌லைவ‌ர்க‌ள் விடும் பிழைக‌ளை ஏனைய‌ க‌ட்சிக‌ள் விம‌ர்சித்தால்த்தான் த‌லைவ‌ர்க‌ள் த‌ம்மை திருத்தி ந‌ல்ல‌து செய்ய‌ முன் வ‌ருவார்க‌ள். 
இவ்வாறு நாம் ச‌மூக‌ ந‌ன்மைக்காக‌ ம‌ஹிந்த‌ நிறைய‌ முஸ்லிம்க‌ளுக்கு ந‌ன்மை செய்தார், ர‌ணில் ஒன்றும் செய்ய‌வில்லை என‌ நாம் விம‌ர்சிக்கும் 
இப்ப‌டியான‌ ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ளில் பொது ம‌க்க‌ள் என் மீது த‌ம் ஆத்திர‌த்தை கொட்டாம‌ல் ர‌ணில் த‌ர‌ப்பிட‌ம் சொல்லி ந‌ல்ல‌து செய்வ‌த‌ன் மூல‌ம் எம‌க்கு ப‌தில் த‌ர‌ சொல்லுங்க‌ள். இதோ நாம் இன்ன‌ இன்ன‌ விசேச‌ ந‌ன்மைக‌ளை முஸ்லிம்க‌ளின் 98 வீத‌ வாக்குக‌ளுக்காக‌ செய்தோம் என‌ சொல்ல‌ச்சொல்லுங்க‌ள். அல்ல‌து இனியாவ‌து செய்வோம் என்றாவ‌து சொல்ல‌ சொல்லுங்க‌ள்.  இதுதான் ச‌மூக‌த்தை நேசிக்கும் ஒவ்வொருவ‌ரினதும்  ந‌ல்ல‌ செய‌லாகும்.

முபாற‌க் அப்துல் ம‌ஜீத்
உல‌மா க‌ட்சி 
எதிரி ந‌ம‌க்கு அடித்தால் அதை ஓர‌ள‌வு தாங்க‌லாம்.  நாம் 98 வீத‌ம் ஆத‌ரித்த‌ ந‌ம் ந‌ண்ப‌ன் ந‌ம்மை அடித்தால் அவ‌ன் ஒரு துரோகி என்ப‌தைக்கூட‌ நாம் விள‌ங்காவிட்டால் ந‌ம்மை விட‌ முட்டாள் இருக்க‌ முடியாது. எதிரி ந‌ம‌க்கு அடித்தால் அதை ஓர‌ள‌வு தாங்க‌லாம்.  நாம் 98 வீத‌ம் ஆத‌ரித்த‌ ந‌ம் ந‌ண்ப‌ன் ந‌ம்மை அடித்தால் அவ‌ன் ஒரு துரோகி என்ப‌தைக்கூட‌ நாம் விள‌ங்காவிட்டால் ந‌ம்மை விட‌ முட்டாள் இருக்க‌ முடியாது. Reviewed by Madawala News on December 14, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.