பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட சந்தேகநபர்கள் இருவர்
மாத்தறை – திஹகொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வீதியில், கட்டுமானப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் இயந்திரங்களுடன் அனுமதிப்பித்திரமின்றி டிப்பர் வாகனமொன்று பயணஞ்செய்வதாகப் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் நிமித்தம் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பின்னர் இருவரையும் குறித்த டிப்பர் வாகனத்துடன் திஹகொட பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட வேளையில், பொலிஸாருக்கு 20ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாக வழங்க முற்பட்டள்ளனர்.
அத்தோடு குறித்த இருவரிடமிருந்தும் மேலதிகமாக 400 லீற்றர் டீசல் கேன்கள் (20) , எரிபொருள் நிரப்புவதற்கு பயன்படுத்தப்படும் மோட்டார் ஒன்றும் மற்றும் வெற்று கேன்கள் நாற்பதும் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அதிவேக நெடுஞ்சாலையில் பொலிஸாருக்கு 20ஆயிரம் ரூபாய் இலஞ்சம் குடுக்க முயற்சித்தவர்கள் கைது.
Reviewed by Madawala News
on
December 05, 2018
Rating: