ஜனாதிபதியுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற தான் தயார் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்திருந்த அறிவிப்பை ஏற்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாரில்லையென உடனே பதிலளித்திருப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான டபிள்யு.டீ.ஜே. செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்க சந்தர்ப்பத்தை அளித்தால், ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட தான் தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவிப்பொன்றை விடுத்திருந்தார்.
த ஹிந்து இந்திய பத்திரிகைக்கு முன்னாள் பிரதமர் வழங்கிய செவ்வியொன்றிலேயே இதனைக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியுடன் இணைந்து செயலாற்ற ரனில் தயாராக இருந்தபோதும் அதற்கு ஜனாதிபதி தயாரில்லை..
Reviewed by Madawala News
on
November 09, 2018
Rating: