அட்டாளைச்சேனை பிரதேச செயலக சமூக பராமரிப்பு நிலையத்தின் பொறுப்பு அபிவிருத்தி உத்தியோகத்தரும்
அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும் எதிர் கட்சி தலைவருமான ஏ.எம்.சுல்பிகார் அவர்கள் அட்டாளைச்சேனை பிரதேச செயலக சமூக பராமரிப்பு நிலையத்தினூடாக மாற்று திறனாளிகள் மற்றும் நலிவுற்ற மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றியதிற்காக அமைதியையும் நீதியையும் நிலை நாட்டும் சமாதான நீதவான்களின் பேரவை இலங்கை என்ற அமைப்பு தேசே கீர்த்தி விருது வழங்கி கௌரவித்தது
இந்த விருதினை கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்கள பணிப்பாளர் என் .மதிவண்ணன் மற்றும் அம்பாறை மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் M.B.சம்சுதீன் அவர்களும் 2018.11.27 ம் திகதி நடைபெற்ற அம்பாறை மாவட்ட சமூக சேவை திணைக்கள உத்தியோகத்தர் களுக்கான மாதாந்த பொதுக்கூட்டத்தில் வழங்கி வைத்தனர்
அக்கரைப்பற்று மாநகர சபை எதிர் கட்சி தலைவருக்கு தேச கீர்த்தி விருது.
Reviewed by Madawala News
on
November 29, 2018
Rating: