வீட்டுக்கு முன் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு .


 மூன்று பிள்ளைகளின் தந்தை இன்று  காலை அவரது வீட்டிற்கு முன்பாக  தூக்கில் தொங்கிய நிலையில்
சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியா மரக்காரம்பளை வீதியிலுள்ள அவரது வீட்டிற்கு முன்பாகவே தூக்கில் தொங்கிய நிலையில்  இன்று  காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மரக்காரம்பளை வீதி , ஈசன் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த   43 வயதுடைய இராமச்சந்திரன் மோகனச்சந்திரன் என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரது மரணம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமையிலான பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வீட்டுக்கு முன் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு . வீட்டுக்கு முன் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு . Reviewed by Madawala News on November 29, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.