ரனில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்க முடியாது என்ற கடுமையான நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இருப்பதாக கொழும்பு அரசியல் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று ஐக்கிய தேசிய முன்னனி தலைவர்கள் ஜனாதிபதியை சந்தித்துள்ள அதேவேளை பாராளுமன்ற சம்பிரதாயங்கள் மற்றும் நிலையியற் கட்டளைகளுக்கு அமைவாக தற்போதய அரசுக்கு எதிராக நம்பிகையில்லா தீர்மானம் கொண்டு வந்து அதனை குரல் பதிவு வாக்கு மூலம் நடத்துமாறு ஜனாதிபதி கட்சி தலைவர்களிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் பெரும்பான்மையை நிரூபிக்கும் ஒருவருக்கு பிரதமர் பதவியை வழங்க ஜனாதிபதி இணங்கியுள்ளதாக கூறப்படும் அதேவேளை, ரனில் விக்ரமசிங்கவுக்கு அதனை வழங்க முடியாது எனவும் அவருடன் இணைந்து பயணிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் வேறு ஒருவரை பிரதமர் பதவிக்கு பரிந்துரை செய்ய ஐக்கிய தேசிய கட்சி தலைவர் தரப்பு தயாராக இல்லை என தெரிவிக்கப்படும் அதேவேளை சஜித் பிரேமதாசவின் பெயரை பரிந்துரை செய்யவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரைக்கு ரனில் தரப்பு எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாலவும். ஐக்கிய தேசிய கட்சியில் மெலும் சிலரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடரும் இழுபறி நிலை !!
Reviewed by Madawala News
on
November 16, 2018
Rating: