முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ சற்று முன்னர் விஷேட மேல் நீதிமன்றில் ஆஜராகினார்.
டீ.எ ராஜபக்ஷ நினைவுத்தூபி மற்றும் அருங்காட்சியகம் அமைப்பதற்கு அரச நிதி 90 மில்லியன் ரூபாவை பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேரிற்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு விசாரணைக்காகவே கோத்தபாய ராஜபக்ஷ விஷேட மேல் நீதிமன்றில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சற்றுமுன் விஷேட மேல் நீதிமன்றில் ஆஜரான கோத்தபாய.
Reviewed by Madawala News
on
November 09, 2018
Rating: