நாளை கூடும் பாராளுமன்றத்தில் குரல் மூல வாக்கெடுப்புக்கு ஜனாதிபதி அனுமதி. இன்றைய கலந்துரையாடலில் ஜனாதிபதி தெரிவித்த வை .
கட்சித் தலைவர்கள், சபாநாயகர் மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்று சற்றுமுன் நிறைவு பெற்றது.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி சில உடன்பாடு களுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, தான் யாப்புக்கு விரோதமாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள போவதில்லை எனவும், பாராளுமன்ற நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க போவதில்லை என தெரிவித்ததுடன் ஐ.தே.க கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளது என்பதையும் ஏற்றுக் கொண்டு உள்ளார்
அத்துடன் நாளை , கூடும் பாராளுமன்றில் கூச்சல் நிலை மேலும் ஏற்பட்டால் குரல் மூல வாக்கெடுப்புக்கு விட தான் தயார் என ஜனாதிபதி கூறியதாக ஐ.தே.க சார்பில் கலந்து கொண்ட ராஜித்த சேனாரத்ன ஊடகங்ளுக்குத் தெரிவித்தார்.
நாளை கூடும் பாராளுமன்றத்தில் குரல் மூல வாக்கெடுப்புக்கு ஜனாதிபதி அனுமதி. இன்றைய கலந்துரையாடலில் ஜனாதிபதி தெரிவித்த வை .
Reviewed by Madawala News
on
November 15, 2018
Rating: