மஹிந்தவுக்கு பெரும்பான்மை இல்லை என சபாநாயகர் அறிவித்த போது கைத்தட்டி மகிழ்ந்த வெளிநாட்டு தூதுவர்கள்..
ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றம் நேற்றுமுன் தினம் பாராளுமன்றம் மீண்டும் கூடிய போது பாராளுமன்ற நிகழ்வுகளை காண ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாட்டு தூதுவர்கள் பாராளுமன்றம் வந்திருந்தமை நாம் அறிந்ததே.
குறித்த தினம் பாராளுமன்றில் ஜயசூர்யவினால் அவசர வாக்கெடுப்பு ஒன்று எடுக்கப்பட்டு மஹிந்தவுக்கு பெரும்பான்மை இல்லை என அறிவிக்கப்பட்டது. இதன் போது அங்கிருந்த வெளிநாட்டு தூதுவர்கள் கை தட்டி மகிழ்ந்தாக பாராளுமன்றில் இருந்த பலர் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும் என்ற விடயத்தில் அமெரிக்க உள்ளிட்ட மேற்குல நாடுகள் கடும் ஆவலாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மஹிந்தவுக்கு பெரும்பான்மை இல்லை என சபாநாயகர் அறிவித்த போது கைத்தட்டி மகிழ்ந்த வெளிநாட்டு தூதுவர்கள்..
Reviewed by Madawala News
on
November 16, 2018
Rating: