நாளை (14) காலை 10.00 மணிக்கு பாராளுமன்றம் கூட்டப்படும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
கடந்த 04ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வௌியிடப்பட்ட 2095/50 வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய நாளை பாராளுமன்றம் கூட்டப்பட உள்ளது.
அதேவேளை நாளை காலை 8.30 மணிக்கு கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் இடம்பெற உள்ளதாகவும் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
225 உறுப்பினர்களின் பாராளுமன்ற உறுப்புரிமை நீடிக்கும் என தெரிவிக்கப்படுகிறது
நாளை காலை பாராளுமன்றம் கூடுகிறது. 225 உறுப்பினர்களின் பாராளுமன்ற உறுப்புரிமை நீடிக்கும்.
Reviewed by Madawala News
on
November 13, 2018
Rating: