நண்பர்களுடன் கடலில் நீராடிக்கொண்டிருந்த கொழும்பு - முகத்துவாரம் சிறுவன் நீரில் அடித்து செல்லபட்டு மாயம்.
கொழும்பு மட்டக்குளி முகத்துவாரம் கடற்பரப்பில் நீராடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவர் நீரில்
மூழ்கி காணாமல் போயுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று மாலையில் இடம்பெற்றுள்ளதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது நண்பர்களுடன் நேற்று மாலையில் கடலில் நீராடிக்கொண்டிருந்த வேளையிலேயே குறித்த சிறுவன் காணாமல் போயுள்ளார்.
15 வயதுடைய முகத்துவாரம் பிரதேசத்தை சேர்ந்த சிறுவனே காணாமல் போயுள்ளார்.
காணாமல் போன சிறுவனை தேடும் பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நண்பர்களுடன் கடலில் நீராடிக்கொண்டிருந்த கொழும்பு - முகத்துவாரம் சிறுவன் நீரில் அடித்து செல்லபட்டு மாயம்.
Reviewed by Madawala News
on
October 22, 2018
Rating: