இன்று காலை மாத்தறை, ஊறுபொக்க பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில்
ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
மோட்டார் சைக்கிளில் பயனித்த ஒருவர் மீது இனந்தெரியாத நபர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கடுமையாக காயமடைந்த குறித்த நபர் மீகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
உயிரிழந்த நபர் வலஸ்சமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 44 வயது E.S சமிந்த தயாரத்ன என அறியப்பட்டுள்ளது.
இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு.
Reviewed by Madawala News
on
October 22, 2018
Rating: