சாய்ந்தமருதில் உள்ள இரண்டு வீதிகளுக்கு முதல் கட்டமாக அமைச்சர் மனோ கணேசன் 4 மில்லியன் நிதி ஒதுக்கீடு..
(SSLO Media)
சாய்ந்தமருதில் உள்ள மேசா வீதி (பிரிவு-05) மற்றும் பழைய தபாலக வீதி (பிரிவு-09)ஆகிய வீதிகள் மக்களுக்கு
போக்குவரத்துக்கு அசெளகரியமாக இருந்ததை அறிந்த ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவரும் தேசிய ஒருமைப்பாடு,நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சரின் மாவட்ட இனைப்பாளருமான கே.ஆர்.றிஸ்கான் முகம்மட்
இவ் வீதிகள் அவசரமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என அமைச்சருக்கு விடுத்த வேண்டுகோளுக்கு இனங்க
தேசிய ஒருமைப்பாடு,நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டனியின் தேசிய தலைவருமான.மனோ கணேசன் அவர்கள் அவருடைய தேசிய ஒருமைப்பாடு,நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் ஊடாக முதல் கட்டமாக இரண்டு வீதிகளுக்கும் நான்கு மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளார்.
இவ் வீதி அபிவிருத்திக்கான பணிகள் எதிர் வரும் வாரங்களில் இடம்பெறும்.
அமைச்சருக்கு சாய்ந்தமருது மக்கள் சார்பில் நன்றிகள்.
சாய்ந்தமருதில் உள்ள இரண்டு வீதிகளுக்கு முதல் கட்டமாக அமைச்சர் மனோ கணேசன் 4 மில்லியன் நிதி ஒதுக்கீடு..
Reviewed by Madawala News
on
October 20, 2018
Rating: