பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பேரை நிபந்தனையற்ற
முறையில் விடுதலை செய்யுமாறு குருநாகல் மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற நிதி மோசடி சம்பந்தமான வழக்கில் வழக்கு முடியும் வரையில் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவை விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிகையில் இன்று குறித்த வழக்கை முன்கொண்டு செல்ல போதுமான ஆதாரங்கள் இல்லாத நிலையில் குறித்த வழக்கு தள்ளுபடி செய்யபட்டுள்ளது.
ஜோண்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவரும் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யபட்டனர்..
Reviewed by Madawala News
on
October 17, 2018
Rating: