2014 இல் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்கு காரணமான அமைச்சர் தற்போதைய அரசாங்கத்தில் உள்ளார்... கண்டி வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் எதனையும் செய்யவில்லை.


2014 இல் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்கு காரணமான அமைச்சர் தற்போதைய
அரசாங்கத்தில் உள்ளார். நாங்கள் ஆட்சியில் இருந்த போது அழிக்கப்பட்ட வீடுகளை மீளகட்டிக்கொ டுத்தோம்.

ஆனால் இந்த வருடம் கண்டி வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் எதனையும் செய்யவில்லை. கண்டி வன்முறைகள் ஆரம்பமான வேளை நான் அந்த பகுதிக்கு உடன டியாகச் சென்று அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களின் கூட்டத்தை கூட்டினேன்.


பிரதமரும் ஜனாதிபதியும் பின்னரே வந்தனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\


இந்தியாவின் த இந்து ஆங்கில பத்திரிகைக்கு அளித்துள்ள விசேட செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட் டுள்ளார்.

இந்தியாவில் நடைபெறும் நிகழ்வு ஒன்றில் உரையாற்றுவதற்கு அங்கு சென்றுள்ள நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித் துள்ளார்.


2015 இல் எதிர்க்கட்சிகள் மாத்திரம் உங்களிற்கு எதிராக அணிதிரளவில்லை . உங்கள் அரசாங்கத்தின் காலத்தில் தமிழ் மக்கள், முஸ்லிம் சிறுபான்மை இனத்த வர்கள் துன்புறுத்தப்பட்டனர்.அவர்கள் உங்களுக்கு மீண்டும் வாக்களிப்பார்கள் என நீங்கள் கருதுகின்றீர்களா?
எனும் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். |
குறித்த செவ்வியின் முக்கிய பகுதிகள் வருமாறு:


கேள்வி: நம்பிக்கையில்லா பிரே ரணை போன்றவற்றின் மத்தியிலும் இலங்கையின் இரு பிரதான கட்சிகளும் தொடர்ந்தும் இணைந்திருக்கின்றனவே. அவர்கள் தேர்தல்கள் இணைந்து போட்டி யிடுவார்கள் என கருதுகின்றீர்களா?


பதில்: எனக்கு இது குறித்து சந்தேகங்கள் உள்ளன.

கேள்வி: நீங்கள் சிறிசேனவுடனும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடனும் இணைந்து செயற்பட தயாரா?


பதில்: துரதிஷ்டவசமாக சிறிசேன என்னுடன் இணைந்து செயற்படத் தயாரில்லை . நாங்கள் புதிய கட்சியை உருவாக்கியுள்ளோம். ஜீ.எல்.பீரிஸ் அதன் தலைவர். எங்களுக்கு 45 வீத ஆதரவு  உள்ளதால் சிறிசேனவிற்கு எங்கள் ஆதரவு அவசியம்,


கேள்வி: நீங்கள் சிறுபான்மை மக்கள் பாதுகாப்பாக உணராத சிங்கள பௌத்த பலம்பொருந்திய பெரும்பான்மையை பிரதிநிதித்துவம் செய்கின்றீர்கள் என்ற கருத்து காணப்படுகின்றதே?


பதில்: 2018 உள்ளூராட்சி தேர்தலில் நாங்கள் 72 வீத வாக்குகளை பெற்றோம். ஆகவே அநேக மக்கள் எங்களுடன் உள்ளனர் என நான் கருதுகின்றேன். இது எங்கள் எதிராளிகள் பரப்பும் பொய், மக்கள் மத்தியில் இவ்வாறான உணர்வு இல்லை என நான் கருதுகின்றேன்


கேள்வி: நீங்கள் 2019 தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு தலைமை தாங்குவீர்களா? 19 வது திருத்தம் இரண்டு தடவைக்கு மேல்
போட்டியிடுவதற்கு தடை விதித் துள்ளதே?


பதில்: நான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு தலைமை தாங்குவேன், அரசமைப்பு திருத்தம் அவ்வாறு தெரிவிக்கின்ற போதிலும் நான் போட்டியி டலாம் என்ற கருத்து காணப்படுகின்றது. நீதிமன்றத்தில் இதனை எதிர்கொள் ளவேண்டும். ஆனால் நான் அந்த ஆபத்தை எதிர்கொள்ளவேண்டுமா என்பது குறித்து சிந்திக்கவேண்டும். அனைவரும் ஏற்கத்தக்க மற்றொரு வேட்பாளரை நியமிப்பதே இன்னொரு சாத்தியப்பாடாகும்.


கேள்வி: அவ்வாறு நியமிக்கப்படுபவர் உங்கள் குடும்பத்தை சேர்ந்தவராகயிருப் பாரா அல்லது வெளியிலிருந்து யாரை யாவது நியமிப்பீர்களா?


பதில்: ஜனாதிபதி தேர்தலில் போட்டி யிடுவதற்கான வயதை 35 ஆக உயர்த் தியுள்ளதால் எனது மகன் தேர்தலில் போட்டியிட முடியாது. எனது சகோதரர் நிச்சயமாக போட்டியாளர்களில் ஒருவராக உள்ளார். ஆனால் கட்சியும் கூட்ட ணியும் தான் யாரை நியமிப்பது என் பதை தீர்மானிக்கவேண்டும்.


கேள்வி: இந்தியாவுடன் உங்களுக்கு நெருக்கடியான உறவுகள் காணப்பட் டன் இந்த விஜயத்தை மோடி அரசாங் கத்துடன் உங்களுக்கு ஏற்பட்டுள்ள நல்லிணக்கம் என கருத முடியுமா?


பதில்: 2015 தேர்தலிற்கு முன்னதாக புரிந்துணர்வின்மை நிலவியது. ஆனால் தற்போது முன்னோக்கி நகர்வதற்கான நேரம் என நான் கருதுகின்றேன்.


கேள்வி: 2015 மார்ச் மாதம் இந்து விற்கு வழங்கிய பேட்டியில் நீங்கள் ரோ
,அமைப்பு எதிர்க் கட்சியை ஆட்சிக்கு கொண்டுவந்தது என குற்றம்சாட்டியி ருந்தீர்கள்.

சில வாரங்களுக்கு முன்னர் இந்தியா- இலங்கையின் உள்விவகாரங் களில் தலையிடக்கூடாது என தெரி வித்திருந்தீர்கள். இது குறித்து கவலை இன்னமும் உங்களிடம் உள்ளதா? பதில்: நான் இந்தியாவை மாத்திரம் குறிப்பிடவில்லை. நாடொன்றின் தேர்தலில் எவரும் தலையிடக்கூ டாது என்றே நான் தெரிவித்தேன். மக்கள் யாரை அதிகாரத்திற்கு கொண் டுவர விரும்புகின்றார்கள் என்பது நாடொன்றின் உள்விவகாரம். அதுவே எனது மனதில் இருந்தது.


தற்போது அவர்கள் அனைவரும் அந்த நேரத்தில் என்ன தவறு நடந்தது தாங்கள் என்ன செய்தோம் என்பதை உணர்ந்துள் ளார்கள் என நான் கருதுகின்றேன். இதன் காரணமாக கடந்த காலங்களை நாங்கள் மறக்கவேண்டும். இது முன்னோக்கி நகர் வதற்கான தருணம்.


கேள்வி: இந்திய - இலங்கை உறவுகள் குறித்த உங்கள் கருத்து என்ன? அவ் வேளை நிலவிய புரிந்துணர்வின்மைக்கு இதுவே காரணமாக உள்ளதா? பதில்: இந்தியாவே எங்களது நெருக் கமான உறவு, எங்கள் அயல்நாடு என நான் தெரிவிப்பேன். அதேவேளை சீனா நீண்ட கால நண்பனாகவும் உள்ளது. சீனாவுடான எங்கள் நடவடிக்கை களின் போது நாங்கள் இந்தியாவை மறப்பதில்லை. எங்கள் அயல்நாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளிற்காக இலங் கையை பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை நாங்கள் எப்போதும் தெரிவித்துள்ளோம்.


கேள்வி: இந்திய - இலங்கை உறவுகள் தற்போது எந்த நிலையில் உள்ளன? இலங்கை அரசதலைவர்கள் சிறப்பான உறவுகள் காணப்படுவதாக தெரிவிக் கின்ற போதிலும் பல உடன்படிக்கைகள் இன்னமும் கைச்சாத்திடப்படாத நிலை யிலேயே காணப்படுகின்றனவே?


பதில்: அவர்கள் சிறந்த உறவு காணப்படுவதாக தெரிவிக்கின்றனர். முன்னரை விட சிறந்த உறவு காணப்ப டுவதாக தெரிவிக்கின்றனர்.இது எங்கள் பக்கத்திலிருந்து வரும் கருத்தே. நான் வெளிநாட்டில் வைத்து எனது அரசாங் கத்தை விமர்சிக்கவில்லை.அவர்களின் சந்திப்புகள் அனைத்தையும் நான் பாராட் டுகின்றேன், ஆனால் எந்த முதலீடும் இலங்கைக்கு கிடைக்கவில்லை. அரசாங்கம் ஸ்திரமற்றதாக காணப்படுகின்றது, இந்தியாவின் பாதுகாப்பிற்கு இலங்கையில் ஸ்திரமான அரசாங்கம் காணப்படுவது அவசியம், பலவீனமான அரசாங்கத்தினால் அதனை வழங்கமுடியாது,


கேள்வி: உங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்தியா குறித்த உங்கள் முதல் முன்னுரிமை என்னவாக காணப்படும்?


பதில்: எங்கள் முதல்முன்னுரிமை முதலீடே.மற்றும் சிறந்த தொடர்பாடல்கள்.விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது டிரொய்கா என்ற கட்டமைப்பு காணப்பட்டது. அதன் மூலம் நள்ளிரவில் கூட முக்கியமான விடயங்கள் குறித்து ஆராய்ந்தோம். பொருளாதார நோக்கங்களிற்காக நாங்கள் அவ்வாறான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

2014 இல் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்கு காரணமான அமைச்சர் தற்போதைய அரசாங்கத்தில் உள்ளார்... கண்டி வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் எதனையும் செய்யவில்லை. 2014 இல் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்கு காரணமான அமைச்சர் தற்போதைய அரசாங்கத்தில் உள்ளார்... கண்டி வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் எதனையும் செய்யவில்லை. Reviewed by Madawala News on September 13, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.